Showing posts with label அருட்கருவி. Show all posts
Showing posts with label அருட்கருவி. Show all posts

Wednesday, 15 July 2020

உத்தரியம்

பழுப்பு உத்தரியம் - கேள்விகளும் பதில்களும் 





பழுப்பு உத்தரியம் அணிபவர்களுக்கு மரியன்னை அளித்த வாக்குறுதி என்ன? 

சைமன் ஸ்டாக் என்ற கார்மல் சபைத் துறவிக்கு காட்சியளித்த புனித கார்மேல் அன்னை பழுப்பு நிற உத்தரியத்தைக் கொடுத்து இவ்வாறு கூறினார்: “இந்த பழுப்பு உத்தரியத்தை அணிந்தவாறு யார் இறந்தாலும் அவர்  முடிவில்லாத நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார். இது மீட்பின் அடையாளம், ஆபத்தில் ஒரு பாதுகாப்பான கேடயம், அமைதியின் உறுதிமொழி மற்றும் உலகம் முடியும் வரை எனது சிறப்பு பாதுகாப்பு.”

பழுப்பு உத்தரியம் பற்றிய புனித மரியன்னையின் வாக்குறுதியைப் பெறுவதற்கு தேவையான நிபந்தனைகள் யாவை?

1. உத்தரியத்தின் பொருள், நிறம் மற்றும் வடிவம் குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் சரியாகக் கடைபிடிக்கப் படவேண்டும். (செவ்வக வடிவத்தில் 100 விழுக்காடு பழுப்பு கம்பளி இருக்க வேண்டும்)
2. ஓர் அருள்பணியாளர் மூலம் உத்தரியத்தை அணிய வேண்டும்.
3. உத்தரியத்தை தொடர்ந்து அணிந்துகொள்ள வேண்டும்.
அன்னையின் வாக்குறுதியைப் பெற்றிட சிறப்பு செபங்கள் அல்லது நல்ல செயல்கள் எதுவும் இல்லை. உத்தரியம் என்பது ஓர் அமைதியான செபமுறை. இது புனித கன்னி மரியாவுக்கு ஒருவரின் முழுமையான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. உத்தரியம் என்பது ஒரு பக்தி முயற்சி. இதன் மூலம் நாம் அன்னையை வணங்குகிறோம், அவளை நேசிக்கிறோம், அவளுடைய பாதுகாப்பில் நம்பிக்கை வைக்கிறோம், மேலும் பழுப்பு உத்தரியத்தை அணிந்துகொள்வதன் மூலம் இந்த விடயங்களை ஒவ்வொரு நாளும் அன்னையிடம் அறிவிக்கிறோம்.

பழுப்பு உத்தரியத்தை யாரெல்லாம் அணியலாம்?

கத்தோலிக்க நம்பிக்கையாளர்கள் அனைவரும் அணிந்துகொள்ளலாம். முதல் நற்கருணைக்குப் பிறகு குழந்தைகள் உத்தரியம் அணிவிக்கப்படுவது நம்மிடையே வழக்கம். கைக்குழந்தைகள் கூட உத்தரியம் அணிவிக்கப்படலாம். 

பழுப்பு உத்தரியத்தை யார் மூலம் அணிந்துகொள்ள வேண்டும்?

எந்தவொரு அருள்பணியாளரும் உங்களுக்கு பழுப்பு உத்தரியத்தை அணிவிக்கலாம். முந்தைய காலத்தில் கார்மல் சபை அருள்பணியாளர்களுக்கு மட்டுமே நம்பிக்கையாளர்களுக்கு பழுப்பு உத்தரியம் அணிவித்து தங்கள் கார்மல் சபையின் மூன்றாம் அங்கத்தினராக இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இச்சடங்கைச் செய்ய செய்ய வேறு எந்த அருள்பணியாளருக்கும் சிறப்பு அனுமதி தேவைப்பட்டது. இருப்பினும், இந்த பக்தி கத்தோலிக்க திரு அவை முழுவதும் இப்போது பரவலாக பரவியுள்ளது, ஆகவே இப்போது திரு அவை அனைத்து அருள்பணியாளர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பழுப்பு உத்தரியத்தை அணிவிக்கும் சடங்கை நிறைவேற்ற அனுமதி அளித்துள்ளது.

பழுப்பு உத்தரியத்தின் இணக்கத்தன்மை என்ன?

பழுப்பு உத்தரியத்தை அணிந்துகொள்வதன் வழியாக, ஒரு நபர் தானாகவே பழுப்பு உத்தரியத்தின் கூட்டமைப்பில் உறுப்பினராகிறார். பழுப்பு உத்தரியத்தின் இணக்கத்தன்மை என்பதன் பொருள் என்னவென்றால், உத்தரியம் அணிவதால் நாம் கார்மெல் ஆன்மீக குடும்பத்தோடு இணைக்கப்படுகிறோம். அதாவது கார்மேல் துறவற சபையின் மூன்றாம் நிலை அங்கத்தினராக மாறுகிறோம். ஏனென்றால் உத்தரியம் என்பது கார்மேல் சபைத் துறவிகளின் அங்கி ஆகும். இதனால் கார்மேல் சபைத் துறவிகள் செய்யும் அனைத்து செபதவங்கள், பக்தி முயற்சிகள் ஆகியவற்றில் நமக்கும் பங்கு உண்டு. 

(முன்பு ஒரு காலத்தில் இவ்வாறு உத்தரியம் அணிந்து தன்னை கார்மேல் சபையின் மூன்றாம் நிலை அங்கத்தினராக இணைத்துக்கொள்ளும் ஒருவரின் பெயரை பதிவேட்டில் பொறிப்பது வழக்கம். ஆனால் இப்போது இது இனி நடைமுறையில் இல்லை. இதற்கான ஒரு காரணம் என்னவென்றால், பழுப்பு உத்தரியம் ஓர் உலகளாவிய பக்தியாக உருப்பெற்றுள்ளது.) 

பழுப்பு உத்தரியத்தின் நன்மைகளைப் பெறுவதற்கு அதை எவ்வாறு அணிய வேண்டும்?

அதனை தோள்பட்டைக்கு மேல் கழுத்தைச் சுற்றிய வண்ணம், ஒரு பகுதி நம் மார்பின் மீது தொங்கும் வண்ணமும், மறுபுறம் பின்புறத்தில் முதுகின் மீது தொங்கும் வண்ணமும்  அணிய வேண்டும். இரண்டு பகுதிகளையும் முன் அல்லது பின்புறத்தில் சேர்த்து அணிந்துகொள்ளக் கூடாது.

கம்பளி ஒவ்வாமை இருந்தால் உத்தரியத்தை எப்படி அணிவது?
ஒருவருக்கு கம்பளி கடுமையான ஒவ்வாமையாக இருந்தால் அல்லது அதனால் சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால், அவர் கம்பளி உத்தரியத்தை தன் ஆடைக்கு மேல் அணியலாம். அல்லது கம்பளி உத்தரியத்தை பிளாஸ்டிக்கில் கவருக்குள் வைத்தும் அணியலாம். இவ்வாறு இருக்கும்போது அதன் ஒரு பக்கம் இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் படமும், மறு பக்கம் நம் அன்னையின் படமும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

உத்தரியத்தில் கம்பளிதான் பயன்படுத்த வேண்டுமா?

ஆம். பருத்தி, பட்டு மற்றும் வேறு எந்த பொருளும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

உத்தரியத்தில் கயிறுக்கு பதிலாக ஒரு சங்கிலியைப் பயன்படுத்தலாமா?

பயன்டுத்தலாம். ஆனால் உத்தரியம் கம்பளியால் ஆனதாக மட்டுமே இருக்க வேண்டும். 

உத்தரியம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும்?

இது செவ்வக அல்லது சதுரமாக இருக்க வேண்டும். இது வட்டமாக, நீள்வட்டமாக அல்லது பலகோணமாக இருக்க கூடாது.

ஒருவர் வேறு நிறத்தில் உத்தரியத்தினை அணியலாமா?

பல்வேறு பக்தி முயற்சிகளுக்காக வேறு சில வண்ணங்களிலும் உத்தரியம் திரு அவையில் பயன்படுததப்படுகிறது. உதாரணமாக, நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை நினைவுகூறும் வகையில் சிவப்பு உத்தரியம் அணியப்படுகிறது. இருப்பினும், அடிப்படையில் உத்தரியம் என்பது கார்மேல் சபைத் துறவிகள் அணியக்கூடிய துறுவற ஆடையின் சிறிய அடையாளமே.  எனவே அவர்களின் துறவு அங்கி பழுப்பு நிறத்தில் இருப்பதால், பழுப்பு நிறமே எப்போதும் உத்தரியத்துக்கு ஏற்ற சரியான நிறமாக கருதப்படுகிறது. இருப்பினும், கருப்பு கம்பளியும் திரு அவையால் அனுமதிக்கப்படுகிறது.


எப்போதும் உத்தரியத்தை அணிய வேண்டுமா அல்லது அதை கழற்றலாமா?

வாக்குறுதியைப் பெறுவதற்கு, உத்தரியத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். உத்தரியம் அணிவதன் மூலம், புனித கன்னிக்கு நம்முடைய அர்ப்பணிப்பபையும் மற்றும் பக்தியையும் காட்டுகிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் வசதிகளுக்கு ஏற்ப அதை எடுத்துவிடுவதில் நம் அன்னை மகிழ்ச்சியடையவதில்லை. ஆக, உத்தரியத்தை  அணிவதன் மூலம் நாம் அன்னையின் மீது கொண்டிருக்கும் அன்பையும், நம்பிக்கையும் அறிக்கையிடுகிறோம். 


குளிக்கும் போது உத்தரியத்தை கழற்றலாமா?

ஆம். கழற்றிக் கொள்ளலாம். 


ஒரு புதிய உத்தரியம் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், மீண்டும் அருள்பணியாளரிடமிருந்துதான் அதை அணிந்துகொள்ள வேண்டுமா?

இல்லை. உங்கள் உத்தரியம் தேய்ந்துவிட்டால் அல்லது உடைந்திருந்தால், நீங்கள் இன்னொன்றைப் பெற்று அதை அணிந்துகொள்ள வேண்டும். ஆசீர்வாதம் மற்றும் அணிவித்தல் புதிய உத்தரியத்திற்கு இன்னும் செல்லுபடியாகும், ஏனெனில் ஆசீர்வாதம் முக்கியமாக உத்தரியத்தை அணியும் நபருக்கே வழங்கப்படுகிறது.


சனிக்கிழமை சலுகை (சாபாத்தின் சலுகை) என்றால் என்ன?

திருத்தந்தை 22 ஆம் யோவானுக்கு நம் அன்னை ஒரு காட்சியின் போது அளித்த வாக்குறுதி இது. உத்தரியத்தை பக்தியுடன் அணிந்தவாறு இறக்கும் ஒருவரை, அவர் இறந்தபின்னர், குறிப்பாக மரணத்திற்குப் பின் வரும் முதல் சனிக்கிழமையன்று நரக நெருப்பிலிருந்து நம் அன்னை விடுவிப்பார். ‘ஓர் அக்கறையுள்ள தாயாக, அவர்கள் இறந்த பிறகு சனிக்கிழமையன்று நான் உத்தரிக்கும் நிலைக்கு இறங்குவேன். அவர்களை விடுவித்து நிலையான வான் வீட்டில் சேர்ப்பேன்." (திருத்தந்தை 22 ஆம் யோவானுக்கு சொல்லப்பட்ட தூய கன்னி மரியாவின் வார்த்தைகள்). இந்த சனிக்கிழமை சலுகை 1322 ஆம் ஆண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவானால் அறிவிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டது. மீண்டும் 1908 ஆம் ஆண்டில் திருத்தந்தையால் உறுதியான ஒப்புதல் அளிக்கப்பட்டது.


சனிக்கிழமை சலுகையைப் (சாபாத்தின் சலுகை) பெறுவதற்கான தேவைகள் யாவை?

1. பழுப்பு உத்தரியத்தை தொடர்ந்து அணிய வேண்டும்.
2. வாழ்க்கையில் ஒருவரின் நிலைக்கு ஏற்ப கற்பைக் கடைபிடிக்க வேண்டும்.
3. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இறைச்சியைத் தவிர்ப்பது அல்லது ஓர் அருள்பணியாளரின் அனுமதியுடன் புனித செபமாலையின் 5 மறையுண்மைகளை தினமும் செபிக்க வேண்டும். 

சிலுவை அடையாளம்


சிலுவை அடையாளமிடுதல்



 

சிலுவை – கிறிஸ்துவின் அடையாளம்கிறிஸ்தவத்தின் அடையாளம்

அடையாளம் என்பது ஒவ்வொரு சமயத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று.  எல்லா சமயங்களும் தங்களை எளிதில் எடுத்தியம்பிட அடையாளங்களைப் பயன்படுத்துகின்றன. அந்த வரிசையில் கிறிஸ்தவர்களின் புனித அடையாளமாக சிலுவை உள்ளதுஏனெனில் அது கிறிஸ்து இயேசுவின் அடையாளம் ஆகும்நமக்காக மனிதராகப் பிறந்த இயேசு சிலுவையில் பலியானதால்சிலுவை நம்முடைய புனிதச் சின்னமாக திகழ்கிறதுசிலுவை கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மீட்பின் சின்னமாகவும்அருளின் வாய்க்காலாகவும் போற்றப்படுகிறது.


எங்கு சிலுவை இருந்தாலும் அது கிறிஸ்தவத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறதுசிலுவை அணிந்திருக்கும் மனிதர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாகவும்சிலுவை வைக்கப்பட்டுள்ள வீடுகளை கிறிஸ்தவர்களின் வீடுகள் எனவும்சிலுவை வைக்கப்பட்டுள்ள நிறுவனங்களை கிறிஸ்தவ நிறுவனங்கள் என்றும் நாம் புரிந்துகொள்கிறோம். (இன்று கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் சிலுவையை ‘பேஷனாக’  அணிந்துகொள்வதை பார்க்கிறோம்).

விவிலியமும் அடையாளமிடுதலும்

மனிதர்கள் தம்மீது அடையாளம் இட்டுக்கொள்வதும்இல்லங்களில் அடையாளம் இட்டுக்கொள்வதும் பழைய ஏற்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு விவிலிய மரபு ஆகும்எடுத்துக்காட்டாக:

1.            நெற்றியில் அடையாளமிடுதல்
நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பும் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு’ (எசே 9:4).

2.            வீடுகளில் அடையாளம் இடுதல்
ஈசோப்புக் கொத்தை எடுத்துகிண்ணத்திலுள்ள இரத்தத்தில் அதைத் தோய்த்துகதவின் மேல் சட்டத்திலும்இரு நிலைக்கால்களிலும் கிண்ணத்திலுள்ள இரத்தத்தைப் பூசுங்கள்’ (விப 12:22).

இவ்வாறு விவிலியத்தில் அடையாளங்கள் என்பவை அருள்வாழ்வுக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பதை அறிகிறோம்இப்பின்னணியில் கிறிஸ்தவர்களாகிய நாமும் சிலுவை அடையாளத்தை நம்முடைய அருள்வாழ்வுக்கு உதவும் ஒன்றாகவே அணுகிட வேண்டும்.

சிலுவை அடையாளமிடுதல் தோன்றிய வரலாறு

கிறிஸ்தவர்கள் தம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்வதைப்பற்றி விவிலியத்தில் நேரடியான குறிப்புகள் இல்லைஆனால் திருத்தூதர்கள் காலம் தொட்டே இந்த சிலுவை அடையாளம் வரைவது என்பது வழக்கத்தில் இருந்திருக்கிறதுபுனித பேசில் என்பவர் திரு அவையின் தொடக்க காலங்களில் திருமுழுக்கு கொடுக்கப்பட்டபோது இந்த சிலுவை அடையாளம் வரைவது என்பது வழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார்அதிலிருந்துதான் சிலுவை அடையாளம் வரைவது எல்லோருக்கும் பொதுவான ஓர் கிறிஸ்தவ செய்கையாக மாறியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

திரு அவையின் தந்தையர்களுள் ஒருவரான தெர்த்தூலியன் (கி.பி. 211) என்பவர் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்காக வாழ்கிறார்கள் என்பதை நினைவூட்டகிறிஸ்தவர்கள் தங்கள் நெற்றியிலே சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளவேண்டும் என்று போதித்தார்மேலும் நாளின் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களிலும் சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளுங்கள் என்றும் இவர் கற்பித்தார்.

சிலுவை அடையாளம் - செபம் மற்றும் அருட்கருவி

புனித சிலுவை அடையாளம்’ என்பதை ஒரு முக்கியமான அடிப்படை செபமாக கத்தோலிக்கத் திரு அவை வைத்திருக்கிறது.  இந்த சிலுவை அடையாளம் என்கிற செபத்தை எல்லா அன்றாட மற்றம் ஆன்மீக நிகழ்வுகளுக்கு முன்னதாகவும்இறுதியிலும் நாம் பயன்படுத்துகிறோம். ‘புனித சிலுவை அடையாளம்’ என்பது மிக முக்கியமான அருட்கருவியும் ஆகும்திரு அவையால் ஏற்படுத்தப்பட்டுஅருள் வாழ்வில் நாளும் வளர நமக்கு உதவிடக் கூடியவற்றை (செயல்கள்பொருட்கள்அருட்கருவிகள் என்கிறோம்அந்த அருட்கருவிகளில் முதன்மையான இடத்தை சிலுவை அடையாளம் பெறுகிறது.

சிலுவை அடையாளம் வரைவது ஏன்?
  
          

அர்ப்பணமும் புனிதப்படுத்துதலும்: சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நாம் நம்மை மூவொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம்மூவொரு கடவுளின் பெயரால் நம்மையே நாம் புனிதப்படுத்திக்கொள்கிறோம்இச்செயல் அருள்வாழ்வில் வளர நமக்கு உதவுகிறது.

மூவொரு கடவுள் மீதான நம்பிக்கை: சிலுவை அடையாளம் வரைகிற போது நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் நற்செய்தியில் நாம் வாசிக்கிறபடி ‘தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால்’ (காண்மத் 28:19) என்கிற திருமுழுக்கின் வாய்பாடு ஆகும்இவ்வாறு சொல்வதன் வழியாகநாம் நம்முடைய கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மையாகிய மூவொரு கடவுள் மீதான நம்பிக்கையை அறிக்கையிடுகிறோம்.

சிலுவையின் வழியில் மீட்பு: புனித பவுல் சொல்வதைப் போல கிறிஸ்தவர்களாகிய நமக்கு சிலுவையைப் பற்றிய வெட்கம் ஏதும் இல்லை. (காண்: 1 கொரி 1:18,23). எனவே சிலுவை அடையாளத்தை நம் மீது வரைகின்றபோது வெளிப்படையாக நாம் நம்மை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்துகின்றோம்சிலுவையின் வழியாகவே இயேசு நமக்கு மீட்பு கொடுத்தார் என்பதையும் இதன் வழியாக நாம் அறிக்கையிடுகின்றோம்.

சிலுவை அடையாளம் வரைவதன் இறையியல்

சிலுவை அடையாளம் வரைந்து கொள்வதில் ஏராளமான கருத்துகளும் சிந்தனைகளும் இறையியல் அடிப்படையில் நிறுவப்படுகின்றனஇருப்பினும் நம்முடைய கற்றறிதலுக்காக ஆறு காரியங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
  • நம்பிக்கை அறிக்கையின் சுருக்கம்
  • திருமுழுக்கின் நினைவூட்டல்
  • சீடத்துவத்தின் அடையாளம்
  • துன்பங்களை ஏற்றுக்கொள்வதன் உறுதிப்பாடு
  • அலகைக்கு எதிரான ஆயுதம்
  • தன்னலத்தின் மீதான வெற்றி

 1.            நம்பிக்கை அறிக்கையின் சுருக்கம்
நாம் சிலுவை அடையாளம் வருகிறபோது தந்தை கடவுள் இயேசு மற்றும் தூய ஆவியார் மீதான நம்முடைய நம்பிக்கையை அறிக்கை செய்கிறோம்நம் கடவுள் ஒரே கடவுள் என்றும் அவர் மூன்று ஆட்களாக இருக்கின்றார் என்றும் நம்முடைய நம்பிக்கை அறிக்கையின் சுருக்கத்தை இதன் வழியாக எளிய முறையில் பறைசாற்றுகிறோம்

2.            திருமுழுக்கின் நினைவூட்டல்
சிலுவை அடையாளம் வரைந்துகொள்வது நம்முடைய திருமுழுக்கை நமக்கு நினைவூட்டக்கூடியதாக இருக்கிறதுகிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை நமக்கு வெளிப்படுத்தும் விதமாகவேதிருமுழுக்கின் போது நம்மீது சிலுவை அடையாளம் வரையப்பட்டதுஅதனால் நாம் ஒவ்வொரு முறையும் நம்மீது சிலுவை அடையாளம் வரையும் போது நம்முடைய திருமுழுக்கை நாம் மீண்டுமாக நினைவுபடுத்திக் கொள்கிறோம்நாம் இயேசுவோடு இணைக்கப்பட்டிருக்கின்றோம்  என்கிற நம்பிக்கையையும் பெறுகிறோம்

3.            சீடத்துவத்தின் அடையாளம்
கிரேக்க கலாச்சாரத்தின்படி அடிமைகளின் உரிமையாளர்கள் தங்கள் அடிமைகளின் நெற்றியின் மீது ஏதேனும் அடையாளத்தையோ அல்லது முத்திரையையோ பதிப்பது வழக்கம்இது அந்த அடிமை அவருடைய உரிமையாளருக்குச் சொந்தம் என்பதை வெளிக்காட்டுகிறதுஅதேபோல கிறிஸ்துவின் சிலுவை அடையாளத்தை தம்மீது வரைந்துகொள்கிற கிறிஸ்தவர்கள் கிறிஸ்து இயேசுவுக்கு சொந்தமானவர்கள் என்பதையும் இது நமக்கு வெளிப்படுத்துகிறதுஅடிமை அவருடைய உரிமையாளர் சொல்வதற்குக் கட்டுப்பட்டும் கீழ்படிந்தும் வாழ்வதைப் போல நாமும் கிறிஸ்துவுக்கு கட்டுப்பட்டும் கீழ்ப்படிந்தும் வாழ வேண்டும் என்பதையும் நமக்கு இது தெரிவிக்கிறதுகிறிஸ்துவின் சீடர்கள் என்பவர்கள் அவருடைய கட்டளைகளை கடைபிடித்து அவரைப்போல வாழ முயல வேண்டும்எனவே சிலுவை அடையாளம் வரைவதன் மூலம் நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைபிடித்துஇயேசுவைப் போன்று  வாழத் தயார் என்று தீர்மானித்துவிட்ட சீடத்துவத்தின் அடையாளமாகும்.

4.            துன்பங்களை ஏற்றுக்கொள்வதன் உறுதிப்பாடு
சிலுவை என்பது துன்பத்தின் குறியீடுதுன்பமாகிய சிலுவையின் வழியாகவே கிறிஸ்து மனிதருக்கு மீட்பை பெற்றுக் கொடுத்தார்எனவே கிறிஸ்து இயேசுவைப் போல நாமும் துன்பத்தை துணிவுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்கிற மனநிலையையும்உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்துகிறது.

5.            அலகைக்கு எதிரான ஆயுதம்
சிலுவை என்பது கிறிஸ்துவின் வெற்றியின் சின்னமாகவும் இருக்கிறதுநம்மீது சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் எனத் தெரிவிக்கிறோம்அதனால் இது அலகையை மிகவே அச்சுறுத்துகின்றதுகிறிஸ்துவுக்கு சொந்தமானதை அலகையால் தீண்ட முடியாதுஎனவே சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நம்மை கிறிஸ்துவுக்கு சொந்தமாக்கிநம்மையே நாம் அலகையிடமிருந்து பாதுகாத்துக்கொள்கிறோம்.  

6.            தன்னலத்தின் மீதான வெற்றி
இறையன்போடும்பிறர் அன்போடும் வாழ்வதே சிலுவை வழி வாழ்வதாகும்இதற்கு தன்னலம் தடையாக இருக்கிறதுதன்னலத்தை தகர்த்து அன்பு வாழ்வு வாழஇயேசுவின் சிலுவை நமக்கு உதவுகிறதுஇவ்வாறு சிலுவை அடையாளமிடுவதுநம்மையும் இயேசுவைப் போல தன்னலம் இல்லாதவர்களாக வாழ அழைக்கிறதுசிலுவை இயேசு நம்மீது கொண்டிருந்த தன்னலமற்ற அன்பை நமக்கு உணர்த்துகிறதுநம்மையும் சுய விருப்பு வெறுப்புகளை அகற்றிஅன்புடன் பிறர் மைய வாழ்வு வாழ அழைப்பு தருகிறதுசிலுவை அடையாளம் வரைவது நம்முடைய தன்னலத்தின் மீது வெற்றிகொள்ளவும் நமக்கு உதவுகிறது.

சிலுவை அடையாளம் வரையும் முறை – சுருக்கமானது



இடது கையை மார்பின் மீது வைத்தவாறுதிறந்த வலது கையினுடைய ஐந்து விரல்களையும் சேர்த்த வண்ணம் முதலில் ‘தந்தை’ என்று சொல்லியவாறு நெற்றியைத் தொட வேண்டும்பின்பு ‘மகன்’ என்று சொல்லியவாறு மார்பைத் தொட வேண்டும்பின்பு ‘தூய’ என்று சொல்லியவாறு இடது பக்க தோள்பட்டையையும், ‘ஆவியாரின்’ என்று சொல்லியவாறு வலது பக்க தோள்பட்டையையும் தொட வேண்டும்இறுதியில் இரு கைகளையும் குவித்தவாறு ‘பெயராலேஆமென்’ என்று சொல்லி முடிக்க வேண்டும்.

சிலுவை அடையாளம் வரையும் முறை – விரிவானது

இடது கையை மார்பில் வைத்துக்கொண்டுவலது கையின் பெரு விரலால் கீழ்கண்டவாறு நெற்றியிலும்வாயிலும் மற்றும் மார்பிலும் சிலுவை அடையாளம் வரைய வேண்டும்.

புனித சிலுவை’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘அடையாளத்தினாலே’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடுஎன்று சொல்லியவாறு நெற்றியில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.

எங்கள் எதிரிகளிடமிருந்து’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘எங்களை விடுவித்தருளும்’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடு)  என்று சொல்லியவாறு வாயில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.

எங்கள்’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘இறைவா’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடுஎன்று சொல்லியவாறு மார்பினில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.

குறியீடுகளின் அர்த்தமும் ஆழமும்
  • திறந்த வலது கை - நம்மை ஆசீர்வதிப்பதன் அடையாளம் 
  • ஐந்து விரல்கள் - இயேசுவின் ஐந்து காயங்களைக் குறிக்கின்றன.
  • நெற்றியில் வரையப்படும் சிலுவை – இறைவார்த்தையை திறந்த மனதுடன் கேட்க
  • உதட்டில் வரையப்படும் சிலுவை – இறைவார்த்தையை அறிவிக்க
  • மார்பில் வரையப்படும் சிலுவை - இறைவார்த்தையை தியானித்து வாழ்வாக்க
  • நெற்றியைத் தொடுதல் - அறிவின் குறியீடு (கடவுளை அறிய)
  • மார்பினைத் தொடுதல் - அன்பின் குறியீடு (கடவுளை அன்பு செய்ய)
  • தோள்பட்டை – ஆற்றலின் (சக்தியின்குறியீடு (கடவுளுக்கு பணி செய்ய)