Showing posts with label நற்செய்தி. Show all posts
Showing posts with label நற்செய்தி. Show all posts

Saturday, 3 October 2020

உங்களது நற்செய்தி

 உங்களது நற்செய்தி நூல்!




முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட 

ஓர் அற்புதமான நூல்  உள்ளது.

மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் 

ஆகியோர் எழுதிய நற்செய்தியே அது. 


இறைவனின் தெய்வீக அன்பையும் ஆற்றலையும்

நமக்குக் காண்பிப்பதற்கு நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன.

இப்போது இறைவன் நம்முடைய வாழ்க்கையில் 

இந்நற்செய்தி மீண்டும் எழுதப்படவும், சொல்லப்படவும் விரும்புகிறார்.


அன்புக்குரியது, உண்மையானது, ஊக்கமளிப்பது என்று

மனிதர்கள் நற்செய்தியை நன்கு படித்து பாராட்டுகிறார்கள். 

ஆனால் அதே மனிதர்கள் நற்செய்தியைப் பற்றி,  

ஆம், உங்களது நற்செய்தி நூலைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?


நினைவிலிருக்கட்டும், நீங்கள் ஒரு நற்செய்தியை எழுதுகிறீர்கள். 

ஒரு நாளைக்கு ஓர் அத்தியாயத்தை எழுதுகிறீர்கள். 

உங்கள் எல்லா செயல்களாலும் இதை எழுதுகிறீர்கள். 

உங்கள் சொற்களாலும் இதை எழுதுகிறீர்கள்.


நீங்கள் ஒரு நற்செய்தியை எழுதுகிறீர்கள். 

நீங்கள் எழுதுவது உண்மையாயிருப்பதில் கவனமாக இருங்கள்.

ஏனெனில், பலருக்கு ‘ஒரே நற்செய்தி’ நூலாக இருக்கப்போவது 

நீங்கள் எழுதும் ‘உங்களது நற்செய்தி நூல்’ மட்டுமே!