Wednesday, 15 July 2020

சிலுவை அடையாளம்


சிலுவை அடையாளமிடுதல்



 

சிலுவை – கிறிஸ்துவின் அடையாளம்கிறிஸ்தவத்தின் அடையாளம்

அடையாளம் என்பது ஒவ்வொரு சமயத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று.  எல்லா சமயங்களும் தங்களை எளிதில் எடுத்தியம்பிட அடையாளங்களைப் பயன்படுத்துகின்றன. அந்த வரிசையில் கிறிஸ்தவர்களின் புனித அடையாளமாக சிலுவை உள்ளதுஏனெனில் அது கிறிஸ்து இயேசுவின் அடையாளம் ஆகும்நமக்காக மனிதராகப் பிறந்த இயேசு சிலுவையில் பலியானதால்சிலுவை நம்முடைய புனிதச் சின்னமாக திகழ்கிறதுசிலுவை கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மீட்பின் சின்னமாகவும்அருளின் வாய்க்காலாகவும் போற்றப்படுகிறது.


எங்கு சிலுவை இருந்தாலும் அது கிறிஸ்தவத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறதுசிலுவை அணிந்திருக்கும் மனிதர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாகவும்சிலுவை வைக்கப்பட்டுள்ள வீடுகளை கிறிஸ்தவர்களின் வீடுகள் எனவும்சிலுவை வைக்கப்பட்டுள்ள நிறுவனங்களை கிறிஸ்தவ நிறுவனங்கள் என்றும் நாம் புரிந்துகொள்கிறோம். (இன்று கிறிஸ்தவர்கள் அல்லாதோரும் சிலுவையை ‘பேஷனாக’  அணிந்துகொள்வதை பார்க்கிறோம்).

விவிலியமும் அடையாளமிடுதலும்

மனிதர்கள் தம்மீது அடையாளம் இட்டுக்கொள்வதும்இல்லங்களில் அடையாளம் இட்டுக்கொள்வதும் பழைய ஏற்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு விவிலிய மரபு ஆகும்எடுத்துக்காட்டாக:

1.            நெற்றியில் அடையாளமிடுதல்
நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பும் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு’ (எசே 9:4).

2.            வீடுகளில் அடையாளம் இடுதல்
ஈசோப்புக் கொத்தை எடுத்துகிண்ணத்திலுள்ள இரத்தத்தில் அதைத் தோய்த்துகதவின் மேல் சட்டத்திலும்இரு நிலைக்கால்களிலும் கிண்ணத்திலுள்ள இரத்தத்தைப் பூசுங்கள்’ (விப 12:22).

இவ்வாறு விவிலியத்தில் அடையாளங்கள் என்பவை அருள்வாழ்வுக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பதை அறிகிறோம்இப்பின்னணியில் கிறிஸ்தவர்களாகிய நாமும் சிலுவை அடையாளத்தை நம்முடைய அருள்வாழ்வுக்கு உதவும் ஒன்றாகவே அணுகிட வேண்டும்.

சிலுவை அடையாளமிடுதல் தோன்றிய வரலாறு

கிறிஸ்தவர்கள் தம்மீது சிலுவை அடையாளம் வரைந்து கொள்வதைப்பற்றி விவிலியத்தில் நேரடியான குறிப்புகள் இல்லைஆனால் திருத்தூதர்கள் காலம் தொட்டே இந்த சிலுவை அடையாளம் வரைவது என்பது வழக்கத்தில் இருந்திருக்கிறதுபுனித பேசில் என்பவர் திரு அவையின் தொடக்க காலங்களில் திருமுழுக்கு கொடுக்கப்பட்டபோது இந்த சிலுவை அடையாளம் வரைவது என்பது வழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடுகிறார்அதிலிருந்துதான் சிலுவை அடையாளம் வரைவது எல்லோருக்கும் பொதுவான ஓர் கிறிஸ்தவ செய்கையாக மாறியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

திரு அவையின் தந்தையர்களுள் ஒருவரான தெர்த்தூலியன் (கி.பி. 211) என்பவர் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்காக வாழ்கிறார்கள் என்பதை நினைவூட்டகிறிஸ்தவர்கள் தங்கள் நெற்றியிலே சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளவேண்டும் என்று போதித்தார்மேலும் நாளின் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களிலும் சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளுங்கள் என்றும் இவர் கற்பித்தார்.

சிலுவை அடையாளம் - செபம் மற்றும் அருட்கருவி

புனித சிலுவை அடையாளம்’ என்பதை ஒரு முக்கியமான அடிப்படை செபமாக கத்தோலிக்கத் திரு அவை வைத்திருக்கிறது.  இந்த சிலுவை அடையாளம் என்கிற செபத்தை எல்லா அன்றாட மற்றம் ஆன்மீக நிகழ்வுகளுக்கு முன்னதாகவும்இறுதியிலும் நாம் பயன்படுத்துகிறோம். ‘புனித சிலுவை அடையாளம்’ என்பது மிக முக்கியமான அருட்கருவியும் ஆகும்திரு அவையால் ஏற்படுத்தப்பட்டுஅருள் வாழ்வில் நாளும் வளர நமக்கு உதவிடக் கூடியவற்றை (செயல்கள்பொருட்கள்அருட்கருவிகள் என்கிறோம்அந்த அருட்கருவிகளில் முதன்மையான இடத்தை சிலுவை அடையாளம் பெறுகிறது.

சிலுவை அடையாளம் வரைவது ஏன்?
  
          

அர்ப்பணமும் புனிதப்படுத்துதலும்: சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நாம் நம்மை மூவொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம்மூவொரு கடவுளின் பெயரால் நம்மையே நாம் புனிதப்படுத்திக்கொள்கிறோம்இச்செயல் அருள்வாழ்வில் வளர நமக்கு உதவுகிறது.

மூவொரு கடவுள் மீதான நம்பிக்கை: சிலுவை அடையாளம் வரைகிற போது நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் நற்செய்தியில் நாம் வாசிக்கிறபடி ‘தந்தை மகன் தூய ஆவியாரின் பெயரால்’ (காண்மத் 28:19) என்கிற திருமுழுக்கின் வாய்பாடு ஆகும்இவ்வாறு சொல்வதன் வழியாகநாம் நம்முடைய கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மையாகிய மூவொரு கடவுள் மீதான நம்பிக்கையை அறிக்கையிடுகிறோம்.

சிலுவையின் வழியில் மீட்பு: புனித பவுல் சொல்வதைப் போல கிறிஸ்தவர்களாகிய நமக்கு சிலுவையைப் பற்றிய வெட்கம் ஏதும் இல்லை. (காண்: 1 கொரி 1:18,23). எனவே சிலுவை அடையாளத்தை நம் மீது வரைகின்றபோது வெளிப்படையாக நாம் நம்மை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்துகின்றோம்சிலுவையின் வழியாகவே இயேசு நமக்கு மீட்பு கொடுத்தார் என்பதையும் இதன் வழியாக நாம் அறிக்கையிடுகின்றோம்.

சிலுவை அடையாளம் வரைவதன் இறையியல்

சிலுவை அடையாளம் வரைந்து கொள்வதில் ஏராளமான கருத்துகளும் சிந்தனைகளும் இறையியல் அடிப்படையில் நிறுவப்படுகின்றனஇருப்பினும் நம்முடைய கற்றறிதலுக்காக ஆறு காரியங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
  • நம்பிக்கை அறிக்கையின் சுருக்கம்
  • திருமுழுக்கின் நினைவூட்டல்
  • சீடத்துவத்தின் அடையாளம்
  • துன்பங்களை ஏற்றுக்கொள்வதன் உறுதிப்பாடு
  • அலகைக்கு எதிரான ஆயுதம்
  • தன்னலத்தின் மீதான வெற்றி

 1.            நம்பிக்கை அறிக்கையின் சுருக்கம்
நாம் சிலுவை அடையாளம் வருகிறபோது தந்தை கடவுள் இயேசு மற்றும் தூய ஆவியார் மீதான நம்முடைய நம்பிக்கையை அறிக்கை செய்கிறோம்நம் கடவுள் ஒரே கடவுள் என்றும் அவர் மூன்று ஆட்களாக இருக்கின்றார் என்றும் நம்முடைய நம்பிக்கை அறிக்கையின் சுருக்கத்தை இதன் வழியாக எளிய முறையில் பறைசாற்றுகிறோம்

2.            திருமுழுக்கின் நினைவூட்டல்
சிலுவை அடையாளம் வரைந்துகொள்வது நம்முடைய திருமுழுக்கை நமக்கு நினைவூட்டக்கூடியதாக இருக்கிறதுகிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை நமக்கு வெளிப்படுத்தும் விதமாகவேதிருமுழுக்கின் போது நம்மீது சிலுவை அடையாளம் வரையப்பட்டதுஅதனால் நாம் ஒவ்வொரு முறையும் நம்மீது சிலுவை அடையாளம் வரையும் போது நம்முடைய திருமுழுக்கை நாம் மீண்டுமாக நினைவுபடுத்திக் கொள்கிறோம்நாம் இயேசுவோடு இணைக்கப்பட்டிருக்கின்றோம்  என்கிற நம்பிக்கையையும் பெறுகிறோம்

3.            சீடத்துவத்தின் அடையாளம்
கிரேக்க கலாச்சாரத்தின்படி அடிமைகளின் உரிமையாளர்கள் தங்கள் அடிமைகளின் நெற்றியின் மீது ஏதேனும் அடையாளத்தையோ அல்லது முத்திரையையோ பதிப்பது வழக்கம்இது அந்த அடிமை அவருடைய உரிமையாளருக்குச் சொந்தம் என்பதை வெளிக்காட்டுகிறதுஅதேபோல கிறிஸ்துவின் சிலுவை அடையாளத்தை தம்மீது வரைந்துகொள்கிற கிறிஸ்தவர்கள் கிறிஸ்து இயேசுவுக்கு சொந்தமானவர்கள் என்பதையும் இது நமக்கு வெளிப்படுத்துகிறதுஅடிமை அவருடைய உரிமையாளர் சொல்வதற்குக் கட்டுப்பட்டும் கீழ்படிந்தும் வாழ்வதைப் போல நாமும் கிறிஸ்துவுக்கு கட்டுப்பட்டும் கீழ்ப்படிந்தும் வாழ வேண்டும் என்பதையும் நமக்கு இது தெரிவிக்கிறதுகிறிஸ்துவின் சீடர்கள் என்பவர்கள் அவருடைய கட்டளைகளை கடைபிடித்து அவரைப்போல வாழ முயல வேண்டும்எனவே சிலுவை அடையாளம் வரைவதன் மூலம் நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைபிடித்துஇயேசுவைப் போன்று  வாழத் தயார் என்று தீர்மானித்துவிட்ட சீடத்துவத்தின் அடையாளமாகும்.

4.            துன்பங்களை ஏற்றுக்கொள்வதன் உறுதிப்பாடு
சிலுவை என்பது துன்பத்தின் குறியீடுதுன்பமாகிய சிலுவையின் வழியாகவே கிறிஸ்து மனிதருக்கு மீட்பை பெற்றுக் கொடுத்தார்எனவே கிறிஸ்து இயேசுவைப் போல நாமும் துன்பத்தை துணிவுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்கிற மனநிலையையும்உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்துகிறது.

5.            அலகைக்கு எதிரான ஆயுதம்
சிலுவை என்பது கிறிஸ்துவின் வெற்றியின் சின்னமாகவும் இருக்கிறதுநம்மீது சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் எனத் தெரிவிக்கிறோம்அதனால் இது அலகையை மிகவே அச்சுறுத்துகின்றதுகிறிஸ்துவுக்கு சொந்தமானதை அலகையால் தீண்ட முடியாதுஎனவே சிலுவை அடையாளம் வரைவதன் வழியாக நம்மை கிறிஸ்துவுக்கு சொந்தமாக்கிநம்மையே நாம் அலகையிடமிருந்து பாதுகாத்துக்கொள்கிறோம்.  

6.            தன்னலத்தின் மீதான வெற்றி
இறையன்போடும்பிறர் அன்போடும் வாழ்வதே சிலுவை வழி வாழ்வதாகும்இதற்கு தன்னலம் தடையாக இருக்கிறதுதன்னலத்தை தகர்த்து அன்பு வாழ்வு வாழஇயேசுவின் சிலுவை நமக்கு உதவுகிறதுஇவ்வாறு சிலுவை அடையாளமிடுவதுநம்மையும் இயேசுவைப் போல தன்னலம் இல்லாதவர்களாக வாழ அழைக்கிறதுசிலுவை இயேசு நம்மீது கொண்டிருந்த தன்னலமற்ற அன்பை நமக்கு உணர்த்துகிறதுநம்மையும் சுய விருப்பு வெறுப்புகளை அகற்றிஅன்புடன் பிறர் மைய வாழ்வு வாழ அழைப்பு தருகிறதுசிலுவை அடையாளம் வரைவது நம்முடைய தன்னலத்தின் மீது வெற்றிகொள்ளவும் நமக்கு உதவுகிறது.

சிலுவை அடையாளம் வரையும் முறை – சுருக்கமானது



இடது கையை மார்பின் மீது வைத்தவாறுதிறந்த வலது கையினுடைய ஐந்து விரல்களையும் சேர்த்த வண்ணம் முதலில் ‘தந்தை’ என்று சொல்லியவாறு நெற்றியைத் தொட வேண்டும்பின்பு ‘மகன்’ என்று சொல்லியவாறு மார்பைத் தொட வேண்டும்பின்பு ‘தூய’ என்று சொல்லியவாறு இடது பக்க தோள்பட்டையையும், ‘ஆவியாரின்’ என்று சொல்லியவாறு வலது பக்க தோள்பட்டையையும் தொட வேண்டும்இறுதியில் இரு கைகளையும் குவித்தவாறு ‘பெயராலேஆமென்’ என்று சொல்லி முடிக்க வேண்டும்.

சிலுவை அடையாளம் வரையும் முறை – விரிவானது

இடது கையை மார்பில் வைத்துக்கொண்டுவலது கையின் பெரு விரலால் கீழ்கண்டவாறு நெற்றியிலும்வாயிலும் மற்றும் மார்பிலும் சிலுவை அடையாளம் வரைய வேண்டும்.

புனித சிலுவை’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘அடையாளத்தினாலே’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடுஎன்று சொல்லியவாறு நெற்றியில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.

எங்கள் எதிரிகளிடமிருந்து’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘எங்களை விடுவித்தருளும்’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடு)  என்று சொல்லியவாறு வாயில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.

எங்கள்’ (மேலிருந்து கீழாக நேர் கோடு) ‘இறைவா’ (இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக குறுக்குக் கோடுஎன்று சொல்லியவாறு மார்பினில் சிறிய சிலுவை அடையாளத்தை வரைய வேண்டும்.

குறியீடுகளின் அர்த்தமும் ஆழமும்
  • திறந்த வலது கை - நம்மை ஆசீர்வதிப்பதன் அடையாளம் 
  • ஐந்து விரல்கள் - இயேசுவின் ஐந்து காயங்களைக் குறிக்கின்றன.
  • நெற்றியில் வரையப்படும் சிலுவை – இறைவார்த்தையை திறந்த மனதுடன் கேட்க
  • உதட்டில் வரையப்படும் சிலுவை – இறைவார்த்தையை அறிவிக்க
  • மார்பில் வரையப்படும் சிலுவை - இறைவார்த்தையை தியானித்து வாழ்வாக்க
  • நெற்றியைத் தொடுதல் - அறிவின் குறியீடு (கடவுளை அறிய)
  • மார்பினைத் தொடுதல் - அன்பின் குறியீடு (கடவுளை அன்பு செய்ய)
  • தோள்பட்டை – ஆற்றலின் (சக்தியின்குறியீடு (கடவுளுக்கு பணி செய்ய)



Tuesday, 2 June 2020

கொரோனாவும் திரு அவையும்


கொரோனா எனும் கொலைக்களத்தில் 
கத்தோலிக்க திரு அவையின் தியாகப்பணி


கொரோனா நடத்தும் கொலை வெறித் தாக்குதலில் 
கொலை நடுங்கிப்போயிருக்கிறது நம் உலகம்.

தன் பிள்ளை தண்ணீருக்குள் விழும் போது 
தானே முன் சென்று குதித்துக் காப்பாற்றும் 
தாயுள்ளம் கொண்டது நம் திரு அவை.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும் போதெல்லாம் 
வாஞ்சையோடு நாம் பெறும் செய்தி இது தான்:
வாழ்வைக் காக்கும் பணியில் அன்றும் இன்றும்
வாடா மலராய் வல்லமையோடு செயல்படுகிறது நம் திரு அவை.

தன் பிள்ளைகள் தவித்து நிற்கும் போது
தாயவள் தனித்து நிற்பதில்லை
தன் பிள்ளைகள் துடித்து நிற்கும் போது 
தாயவள் தள்ளி நிற்பதில்லை.

ஆம், 83 வயதில் ஒற்றை நுரையீரல் மட்டுமே இருந்தாலும்
ஓரமாய் ஒதுங்கி நிற்காமல்
ஒற்றை ஆளாய் சாலையில் இறங்கி திருப்பயணம் போவதைப் பாருங்கள்.
வெள்ளமென மக்கள் கூடும் புனித பேதுரு சதுக்கம்
வெறிச்சோடி கிடப்பதைக் கண்டு
வெளிரிப்போன முகத்தோடு திருத்தந்தை தவிப்பதைப் பாருங்கள்.
தன் மந்தை மடிந்து போவதை 
தந்தை இவர் தான்பார்த்து துடிப்பதைப் பாருங்கள்.



ஆண்டவரே ஆதரவு என்று 
ஆடுகளுக்காக செபிக்கும் ஆயனைப் பாருங்கள்.



மாதாவின் மடியில் மனுக்குலத்தை தாரை வார்த்து
மடிப்பிச்சை கேட்டு மன்றாடும் மக்களின் திருத்தந்தையைப் பாருங்கள்.



கொரோனா பரவுகிறது என்று பதுங்கியவர்கள் இல்லை 
நம் கத்தோலிக்க குருக்கள்.
கடைசிவரை மக்களோடு மக்களாக 
மனதார வாழ்ந்தவர்கள்
நம் கத்தோலிக்க குருக்கள்.

மக்களோடு இருந்ததால்,
மக்களோடு இறந்தார்கள் 
மக்களுக்காக இறந்தார்கள்.

ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கும் 
ஆகச் சிறந்த ஆயர்கள் இவர்களல்லவா?




மருத்துவமனைகளில் நோயுற்றோருக்கு நற்கருணை கொடுக்கும்
மகத்தான பணியை மனதார செய்த குருக்கள்
கொரோனா பாதிப்பால் மாண்டுபோனதைப் பாருங்கள்.
வாழ்ந்தாலும் இறந்தாலும் தன் மந்தையோடுதான் என்று 
வாழ்ந்து காட்டிய விசுவாசத்தின் விண்மீன்கள் இவர்கள்.

பாதிக்கப்பட்ட தன் மக்களுக்கு
பாதுகாப்பும் பராமரிப்பும் தரும் பணியில் 
தன் பாதுகாப்பையும் மறந்து பயணிக்கிறார்கள்
நம்முடைய திரு அவையின் பணியாளர்கள்.

ஆலயக் கதவுகளை அடைத்துக்கொண்டு
ஆடுகளாம் தம் மக்களை காவு கொடுப்பவர்களில்லை 
நம் குருக்கள்.

பாதுகாப்பை பணயம் வைத்து பிறரன்பு பணி செய்ய 
பொதுவெளியில் பயணம் புறப்பட்ட 
நம் குருக்களைப் பாருங்கள்.

தியாகத் திருப்பலியை தினமும் திருப்பீடத்தில் நிறைவேற்றியவர்கள் 
தியாகப் பலியாய் தங்களையே தெருக்களில் ஒப்புக்கொடுப்பதைப் பாருங்கள்.

விளம்பரத்திற்காக பணி செய்யும் வினோதமான மனிதர்களுக்கு மத்தியில்
சப்தமின்றி பணி செய்யும் இவர்களின் சத்தியத்தைப் பாருங்கள்.

நலம் தரும் நற்கருணை ஆண்டவரை கையில் ஏந்தி
நகரின் வீதிகளில் நடந்துபோகும் குருவைப் பாருங்கள்.

மாடியிலும், பொதுவீதியிலும், யாருமில்லா கோவிலிலும்
மன வலியோடு திருப்பலி வைக்கும் திருப்பணியாளரைப் பாருங்கள்.

கொரோனா பாதிப்பு கொடூரமாய் பரவத் தொடங்கிய பிறகு 
கதவுகளுக்குப் பின்னால் பலர் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.
ஆனால் அதுவரை கதவுகளுக்கு பின்னால் 
அடைபட்ட அர்ப்பண வாழ்வு வாழ்ந்த அருட்கன்னியர்கள்
அச்சமின்றி அடுத்தவர் பணிசெய்ய அன்பாய் புறப்பட்டதைப் பாருங்கள்.

இதுவரை கதவுகளுக்கு வெளியே வாழ்ந்தவர்கள் 
இன்று கதவுகளுக்கு உள்ளே பதுங்கி இருக்கிறார்கள்.
இதுவரை கதவுகளுக்கு உள்ளே இருந்தவர்கள்
இன்று கதவுகளுக்கு வெளியே பணி செய்கிறார்கள்.

பசித்திருப்போருக்கு உணவு ஊட்டும் அன்னையரின் பாசத்தைப் பாருங்கள்
மதங்கள் கடந்து மருத்துவ உதவிகள் புரியும் இவர்களின் மனதைப் பாருங்கள்

கைகளிலே செபமாலையை உருட்டிக்கொண்டு
கண்களிலே கண்ணீர் மாலையை உதிர்த்துக்கொண்டு
கதறி செபிக்கும் கன்னியரைப் பாருங்கள்.

கதிர்பாத்திரத்தை கரங்களில் தாங்கி
கட்டிடத்தின் உச்சியில் நின்று 
கடவுளின் ஆசியை வேண்டும் கன்னியரைப் பாருங்கள்.




மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதற்கு
மருத்துவமனைகளில் மரணத்தோடு போராடும்
அருட்கன்னியரையும் அருள்பணியாளர்களையும் பாருங்கள்.

கத்தோலிக்க மருத்துவமனைகளில் 
கருணை உள்ளத்தோடு பணி செய்யும்
கடவுளின் பணியாளர்களைப் பாருங்கள்.

நோயுற்று இருந்தேன், என்னை நீங்கள் கவனித்துக் கொண்டீர்கள்என்று
நொடியும் தாமதிக்காமல் இவர்களிடம் இயேசு உறுதியாகச் சொல்வார்.

இவர்களின் பணி 
இயேசு விட்டுச் சென்ற இறைப் பணி.
புது உலகம் படைக்கும் புரட்சிப் பணி.
தன்னலமற்ற தியாகப் பணி.

இவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இவர்களின் பணி பயனளிக்க இறைவனிடம் மன்றாடுவோம்.

வாழ்க இயேசுவின் திருப்பெயர்.
வளரட்டும் திரு அவை.
மலரட்டும் திருப்பணிகள்.