Tuesday, 2 June 2020

கொரோனாவும் திரு அவையும்


கொரோனா எனும் கொலைக்களத்தில் 
கத்தோலிக்க திரு அவையின் தியாகப்பணி


கொரோனா நடத்தும் கொலை வெறித் தாக்குதலில் 
கொலை நடுங்கிப்போயிருக்கிறது நம் உலகம்.

தன் பிள்ளை தண்ணீருக்குள் விழும் போது 
தானே முன் சென்று குதித்துக் காப்பாற்றும் 
தாயுள்ளம் கொண்டது நம் திரு அவை.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும் போதெல்லாம் 
வாஞ்சையோடு நாம் பெறும் செய்தி இது தான்:
வாழ்வைக் காக்கும் பணியில் அன்றும் இன்றும்
வாடா மலராய் வல்லமையோடு செயல்படுகிறது நம் திரு அவை.

தன் பிள்ளைகள் தவித்து நிற்கும் போது
தாயவள் தனித்து நிற்பதில்லை
தன் பிள்ளைகள் துடித்து நிற்கும் போது 
தாயவள் தள்ளி நிற்பதில்லை.

ஆம், 83 வயதில் ஒற்றை நுரையீரல் மட்டுமே இருந்தாலும்
ஓரமாய் ஒதுங்கி நிற்காமல்
ஒற்றை ஆளாய் சாலையில் இறங்கி திருப்பயணம் போவதைப் பாருங்கள்.
வெள்ளமென மக்கள் கூடும் புனித பேதுரு சதுக்கம்
வெறிச்சோடி கிடப்பதைக் கண்டு
வெளிரிப்போன முகத்தோடு திருத்தந்தை தவிப்பதைப் பாருங்கள்.
தன் மந்தை மடிந்து போவதை 
தந்தை இவர் தான்பார்த்து துடிப்பதைப் பாருங்கள்.



ஆண்டவரே ஆதரவு என்று 
ஆடுகளுக்காக செபிக்கும் ஆயனைப் பாருங்கள்.



மாதாவின் மடியில் மனுக்குலத்தை தாரை வார்த்து
மடிப்பிச்சை கேட்டு மன்றாடும் மக்களின் திருத்தந்தையைப் பாருங்கள்.



கொரோனா பரவுகிறது என்று பதுங்கியவர்கள் இல்லை 
நம் கத்தோலிக்க குருக்கள்.
கடைசிவரை மக்களோடு மக்களாக 
மனதார வாழ்ந்தவர்கள்
நம் கத்தோலிக்க குருக்கள்.

மக்களோடு இருந்ததால்,
மக்களோடு இறந்தார்கள் 
மக்களுக்காக இறந்தார்கள்.

ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கும் 
ஆகச் சிறந்த ஆயர்கள் இவர்களல்லவா?




மருத்துவமனைகளில் நோயுற்றோருக்கு நற்கருணை கொடுக்கும்
மகத்தான பணியை மனதார செய்த குருக்கள்
கொரோனா பாதிப்பால் மாண்டுபோனதைப் பாருங்கள்.
வாழ்ந்தாலும் இறந்தாலும் தன் மந்தையோடுதான் என்று 
வாழ்ந்து காட்டிய விசுவாசத்தின் விண்மீன்கள் இவர்கள்.

பாதிக்கப்பட்ட தன் மக்களுக்கு
பாதுகாப்பும் பராமரிப்பும் தரும் பணியில் 
தன் பாதுகாப்பையும் மறந்து பயணிக்கிறார்கள்
நம்முடைய திரு அவையின் பணியாளர்கள்.

ஆலயக் கதவுகளை அடைத்துக்கொண்டு
ஆடுகளாம் தம் மக்களை காவு கொடுப்பவர்களில்லை 
நம் குருக்கள்.

பாதுகாப்பை பணயம் வைத்து பிறரன்பு பணி செய்ய 
பொதுவெளியில் பயணம் புறப்பட்ட 
நம் குருக்களைப் பாருங்கள்.

தியாகத் திருப்பலியை தினமும் திருப்பீடத்தில் நிறைவேற்றியவர்கள் 
தியாகப் பலியாய் தங்களையே தெருக்களில் ஒப்புக்கொடுப்பதைப் பாருங்கள்.

விளம்பரத்திற்காக பணி செய்யும் வினோதமான மனிதர்களுக்கு மத்தியில்
சப்தமின்றி பணி செய்யும் இவர்களின் சத்தியத்தைப் பாருங்கள்.

நலம் தரும் நற்கருணை ஆண்டவரை கையில் ஏந்தி
நகரின் வீதிகளில் நடந்துபோகும் குருவைப் பாருங்கள்.

மாடியிலும், பொதுவீதியிலும், யாருமில்லா கோவிலிலும்
மன வலியோடு திருப்பலி வைக்கும் திருப்பணியாளரைப் பாருங்கள்.

கொரோனா பாதிப்பு கொடூரமாய் பரவத் தொடங்கிய பிறகு 
கதவுகளுக்குப் பின்னால் பலர் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.
ஆனால் அதுவரை கதவுகளுக்கு பின்னால் 
அடைபட்ட அர்ப்பண வாழ்வு வாழ்ந்த அருட்கன்னியர்கள்
அச்சமின்றி அடுத்தவர் பணிசெய்ய அன்பாய் புறப்பட்டதைப் பாருங்கள்.

இதுவரை கதவுகளுக்கு வெளியே வாழ்ந்தவர்கள் 
இன்று கதவுகளுக்கு உள்ளே பதுங்கி இருக்கிறார்கள்.
இதுவரை கதவுகளுக்கு உள்ளே இருந்தவர்கள்
இன்று கதவுகளுக்கு வெளியே பணி செய்கிறார்கள்.

பசித்திருப்போருக்கு உணவு ஊட்டும் அன்னையரின் பாசத்தைப் பாருங்கள்
மதங்கள் கடந்து மருத்துவ உதவிகள் புரியும் இவர்களின் மனதைப் பாருங்கள்

கைகளிலே செபமாலையை உருட்டிக்கொண்டு
கண்களிலே கண்ணீர் மாலையை உதிர்த்துக்கொண்டு
கதறி செபிக்கும் கன்னியரைப் பாருங்கள்.

கதிர்பாத்திரத்தை கரங்களில் தாங்கி
கட்டிடத்தின் உச்சியில் நின்று 
கடவுளின் ஆசியை வேண்டும் கன்னியரைப் பாருங்கள்.




மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதற்கு
மருத்துவமனைகளில் மரணத்தோடு போராடும்
அருட்கன்னியரையும் அருள்பணியாளர்களையும் பாருங்கள்.

கத்தோலிக்க மருத்துவமனைகளில் 
கருணை உள்ளத்தோடு பணி செய்யும்
கடவுளின் பணியாளர்களைப் பாருங்கள்.

நோயுற்று இருந்தேன், என்னை நீங்கள் கவனித்துக் கொண்டீர்கள்என்று
நொடியும் தாமதிக்காமல் இவர்களிடம் இயேசு உறுதியாகச் சொல்வார்.

இவர்களின் பணி 
இயேசு விட்டுச் சென்ற இறைப் பணி.
புது உலகம் படைக்கும் புரட்சிப் பணி.
தன்னலமற்ற தியாகப் பணி.

இவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இவர்களின் பணி பயனளிக்க இறைவனிடம் மன்றாடுவோம்.

வாழ்க இயேசுவின் திருப்பெயர்.
வளரட்டும் திரு அவை.
மலரட்டும் திருப்பணிகள்.


Monday, 1 June 2020

இயேசுவின் தூய்மைமிகு இருதயம்


இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் பழங்கால ஓவியம்




பல நூற்றாண்டுகளாக இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் மீதான பக்தி கிறிஸ்துவின் ஐந்து திருக்காயங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் மீதான பக்தி கிறிஸ்தவத்தின் முதல் நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும், 17 ஆம் நூற்றாண்டு வரை குறிப்பாக புனித மார்கரெட் மேரி அலகோக்கிற்கு தனிப்பட்ட வெளிப்பாடுகள் வழங்கப்படும் வரையில் இது பிரபலமான ஒரு பக்திமுயற்சியாக இருக்கவில்லைஇருப்பினும் புனித மெக்டில்டா (இறப்பு 1298) மற்றும் புனித கெர்ட்ரூட் (இறப்பு 1302) ஆகியோர் இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் மீது சிறப்பான பக்தி கொண்டிருந்தனர் என்பதும் தெரியவருகிறதுஆனால் அதுவரை கிறிஸ்தவர்கள் ‘கிறிஸ்துவின் ஐந்து திருக்காயங்களுக்கு’ வலுவான பக்தியைக் கொண்டிருந்தனர்இதற்கான முக்கியக் காரணம் யாதெனில் புனித பூமியிலிருந்து சிலுவைப்போருக்குப் பின்பாகத்  திரும்பியவர்கள்  இயேசுவின் திருப்பாடுகளின் மீது கொண்டிருந்த பேரார்வம் ஆகும்இடைக்கால கிறிஸ்தவர்கள் இயேசுவின் அன்பின் ஆழத்தை அவர் அனுபவித்த பல்வேறு காயங்கள் மூலம் உணர்ந்தனர்அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது அவரது இதயத்தைத் துளைத்த ‘மார்பு’ அல்லது ‘பக்க’ காயம் ஆகும்.

கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் கூற்றுப்படி, ‘கிறிஸ்துவின் காயங்களுக்கு வணக்கம் செலுத்தும் ஒரு திருவிழாவுக்கான ஆரம்ப சான்றுகள் துரிங்கியாவின் ஃபிரிட்ஸ்லரின் மடாலயத்திலிருந்து வந்தனஅங்கு பதினான்காம் நூற்றாண்டில் இயேசுவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவின் எண்கிழமைகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு விழா கொண்டாடப்பட்டது. … பதினைந்தாம் நூற்றாண்டில் இத்திருவிழா வெவ்வேறு நாடுகளுக்குசாலிஸ்பரி (இங்கிலாந்து), ஹீஸ்கா மற்றும் ஜாகா (ஸ்பெயின்), வியன்னா மற்றும் டூர்ஸ் வரை பரவியதுமேலும் கார்மல் துறவற சபையினர்,  பிரான்சிஸ்கன் துறவற சபையினர்தோமினிகன் துறவற சபையினர் மற்றும் பிற துறவற சபையினரின் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டது.’

தொடக்கத்தில் இயேசுவின் காயங்களுக்கான விழா உலகளாவிய ஒன்றாக இல்லைஆனால் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்த விழா நடந்த அதே நாளில் தனது தூய்மைமிகு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விழாவை விரும்புவதாக இயேசு புனித மார்கரெட் மேரி அலகோக்கிற்கு வெளிப்படுத்தினார்.

புனித மார்கரெட் மேரியின் வெளிப்பாடுகளுக்கு முன்புஇயேசு கிறிஸ்துவின் மற்ற காயங்களுடன் இயேசுவின் தூய்மைமிகு இருதயமும் பொதுவாக ஒரு குறியீட்டு முறையில் சித்தரிக்கப்பட்டதுஎடுத்துக்காட்டாகஇங்கிலாந்திலிருக்கும் இந்த ஓவியம் கி.பி. 1490 - 1500 ஆண்டைச் சார்ந்தது.  இது இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் ஆரம்பகால ஓவியங்களுள் ஒன்றாகும்இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலுள்ள போட்லியன் நூலக காப்பகத்தில் உள்ளது.




இப்படத்தில் இயேசுவின் ஐந்து காயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றனமையத்தில் ஓர் எளிய இதயம் மற்றும் அதிலிருந்து பீறிட்டு வழியும் இரத்தம் ஒரு கிண்ணத்தில் ஊற்றுகிறதுஇது மீண்டும் இயேசுவின் திருப்பாடுகள்இயேசுவின் தூய்மைமிகு இருதயம் மற்றும் தூய்மைமிகு நற்கருணை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு தெளிவான தொடர்பை வெளிப்படுத்துகிறது.

பிற்காலத்தில் இயேசு தனது இருதயத்தை இவ்வுலகிற்கு வழங்குகிறார் என்கிற கருத்தின் அடிப்படையில்இயேசுவின் தூய்மைமிகு இருதயம் இயேசுவின் கைகளில் இருப்பதுபோன்று சித்தரிக்கப்பட்டதுஇது 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டு வரையிலும் வழக்கத்தில் இல்லைஇப்போது இதுவே உலகில் இயேசுவின் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றாகும்.

இருப்பினும் இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தையும் கிறிஸ்துவின் பாடுகளினால் ஏற்பட்ட திருக்காயங்களையும் ஒன்றோடொன்று இணைத்தே நினைவில் கொள்வது மிகவே முக்கியம்ஏனெனில் இயேசுவின் அவலகரமான துன்பம் மனிதகுலத்தின் மீதான அவரது அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

உதவி: