Friday, 1 May 2020

அன்னையை அறிவோம் - 1



அன்னையை அறிவோம் - 1  



1. மரியாவின் சொந்த ஊர் எதுநாசரேத் (லூக்கா1:26).

2. மரியாவின் கணவர் யார்எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்புனித யோசேப்பு - தாவீது குடும்பத்தினர் (லூக்கா 1:27).

3. இறைவனின் திட்டத்தை அன்னை மரியாவிடம் அறிவித்த வானதூதர் யார்கபிரியேல் வானதூதர் (லூக்கா 1:26-38).

4.'அருள் நிறைந்த மரியே…’ என்ற இறைவேண்டலின் முன் பகுதியைத் தொடுத்தவர்கள் யார்கபிரியேல் வானதூதர் (லூக்கா 1:26-28), எலிசபெத் (லூக்கா 1:42).

5. மங்கள வார்த்தையைக் கேட்ட மரியா வானதூதருக்கு என்ன பதில் தந்தார்நான் ஆண்டவரின் அடிமைஉம் சொற்படியே எனக்கு நிகழட்டும்;”. (லூக்கா 1:38).

6. மரியா எலிசபெத்தைச் சந்திக்க எந்த ஊருக்குச் சென்றார்யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊர் (அயின்கரீம்) (லூக்கா 1:39).

7. ‘பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்’ என்று மரியாவிடம் யார் கூறியதுஎலிசபெத்து (லூக்கா  1:42).

8. ‘மரியாவின் புகழ் பாடல்’  என்ற பாடலை மரியா எப்போது பாடினார்கருவுற்ற எலிசபெத்தை மரியா சந்தித்தபோது (லூக்கா1:46-55).

9. மரியாவின் புகழ் பாடலை முன்னதாகவே பழைய ஏற்பாட்டில் பாடியிருக்கும் பெண்மணி யார்சாமுவேலின் தாய் அன்னா (1 சாமுவேல்  2:1-10).

10. எருசலேம் ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இயேசுவிடம் மரியா என்ன சொன்னார்மகனேஏன் இப்படிச் செய்தாய்இதோ பார்உன் தந்தையும்நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே!” (லூக்கா  2:48).