அன்னையை அறிவோம் - 11
1. மரியாயின் சேனை எங்கு தோற்றுவிக்கப்பட்டது? அயர்லாந்திலுள்ள டப்ளின் மாநகரில்.
2. மரியாயின் சேனையைத் தோற்றுவித்தவர் யார்? இறையடியார் பிராங்க் டஃப்.
3. மரியாயின் சேனை எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1921 ஆம் ஆண்டு செப்;டம்பர் 7 ஆம் நாள்.
4. சுதந்திர இந்தியாவின் பாதுகாவலி யார்? விண்ணேற்பு அன்னை.
5. ‘தங்க இதயம்’ என மரியாவைக் கொண்டாடும்
நாடு எது? பெல்ஜியம்.
6. ரஷ்யா மரியாவின் மாசற்ற இதயத்துக்கு யாரால், எப்போது ஒப்புக்கொடுக்கப்பட்டது? திருத்தந்தை 12 ஆம் பத்திநாதரால், 1952 ஆம் ஆண்டு ஜுலை மாதம்.
7. மரியாவின் கொடையை இங்கிலாந்து எவ்வாறு அழைக்கிறது? அன்னையின் வரதட்சணை.
8. அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே நாட்டின் பாதுகாவலி யார்? லூஜன் அன்னை.
9. போலந்தில் மரியன்னையை எவ்வாறு அழைக்கிறார்கள்? கருப்பு மடோனா.
10. சரகோசாவில் அன்னையை எப்பெயரால் அழைக்கிறார்கள்? தூண் அன்னை.