Sunday, 10 May 2020

அன்னையை அறிவோம் - 10


அன்னையை அறிவோம் - 10






1. மரியாவின் புனித ஆண்டு திரு அவையில் எந்த வருடம் கொண்டாடப்பட்டது1987.

2. ‘மரியாவின் இரகசியம்என்னும் புத்தகத்தை எழுதியது யார்? புனித லூயிஸ் டி மான்போர்ட்.

3. ‘மரியாவின் புகழ்பாடும் திரு அவையின் தந்தையர்என்று அழைக்கப்படும் இருவரின் பெயரைக் குறிப்பிடுகபுனித எப்ரேம், புனித அம்புரோஸ்.

4. ‘புதிய ஏவாள்என்று அழைக்கப்படுபவர் யார்புனித மரியா.

5. மரியன்னையின் தூய இருதயத்திற்கு இவ்வுலகம் எப்போது யாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டது1942 அக்டோபர் 31 ஆம் நாள் திருத்தந்தை 12 ஆம் பத்திநாதரால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

6. மரியாவின் திருத்தந்தை என அழைக்கப்படுபவர் யார்திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்.

7. மரியன்னையின் மறைவல்லுநர்கள் சிலரை கூறுபுனித பெர்னாந்து, புனித லிகோரி, புனித பீட்டர் தமியான், புனித பொனவெஞ்சர்.

8. மரியா யாரால் விண்ணக மண்ணக அரசியாக திரு அவையில் பிரகடனப்படுத்தப்பட்டாள் திருத்தந்தை 12 ஆம் பத்திநாதரால்.  

9. ‘மரியாவின் அரச மகத்துவம்என்கிற திருமடலை எழுதிய திருத்தந்தை யார்திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்.

10. ‘மரியாவின் பண்பாடுஎன்னும் சுற்றுமடல் யாரால் எப்போது வெளியிடப்பட்டதுதிருத்தந்தை ஆறாம் பவுலால் 1974 ஆம் ஆண்டு  பிப்ரவரி 2 ஆம் தேதி இயேசு ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பட்ட திருவிழாவின்போது.