Monday, 28 September 2020

திஸ்மஸ் என்ற நல்ல கள்வனின் கதை

திஸ்மஸ் என்ற நல்ல கள்வனின் கதை



பயணத்தின் பல நாட்களுக்குப் பிறகு, ஓர் இரவு திருக்குடும்பம் மிகவும் பாழடைந்த ஓர் இடத்திற்கு வந்தது. அவ்விடம் பெரும் ஆபத்து நிறைந்தது. ஏனெனில் திருடர்களின் கும்பல் அருகிலுள்ள குகைகளில் ஒளிந்துகொண்டு தனிமையாக வரும் பயணிகளைத் தாக்கி அவர்களின் பொருள்களைக் கொள்ளையிடுவது வழக்கம். அன்று அத் திருக்குடும்பம் அத்திருடர்கள் இருக்கும் இடத்தை நெருங்கிய சமயத்தில், திருடர்களின் கும்பல் திருக்குடும்பத்தின் மீது பாய்ந்தார்கள்.

இருப்பினும், அவர்கள் மரியாவின் கையில் இருந்த அந்த அழகான குழந்தை இயேசுவைப் பார்த்த நிமிடத்தில், ஒரு பிரகாசமான ஒளிக்கதிர், அம்பு போல, அத்திருடர் கூட்டத்தின் தலைவனின் இதயத்தில் ஊடுருவியது. வித்தியாசமான இந்நிகழ்வால், திருடனுக்கு மனமாற்றம் ஏற்பட்டது. திருக்குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்காதபடி தனது சக கொள்ளையர்களுக்கு அவர் கட்டளையிட்டான். மேலும் அக்கும்பலுக்கே ஆச்சரியம் தரும்படி, திருக்குடும்பத்தை தன்னுடன் தனது வீட்டில் உணவருந்துமாறு திருடர் கூட்டத்தின் தலைவன் அழைத்தான்.


கொள்ளையரின் தலைவன் தன் இதயம் எவ்வளவு அதிசயமாக இவ்வாறு மாற்றம் பெற்றது என்று தன் மனைவியிடம் சொன்னான். மேலும் திருடர்கள் பலரும் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த தலைவரின் மனைவி திருக்குடும்பத்திற்கு சிறிய ரொட்டிகள், பழங்கள், தேன் அடைகள் மற்றும் பழச்சாறு ஆகியவற்றைக் கொண்டு வந்தாள்.

குழந்தை இயேசுவின் குளியல்

அவர்கள் சாப்பிட்ட பிறகு, மரியா கொள்ளையரின் மனைவியிடம் தனது குழந்தையை குளிப்பாட்ட சிறிது தண்ணீர் கேட்டார். அந்த பெண் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து மரியாவிடம் கொடுத்துவிட்டு, தன் கணவனுடன் அருகிலேயே நின்றார். மரியா குழந்தை இயேசுவின் மீதிருந்த பாலைவன தூசியை அத்தண்ணீரைக்கொண்டு மென்மையாகக் கழுவினார். திருடர்களின் தலைவனும், அவனது கூட்டம் முழவதும் திருக்குடும்பத்தின் தோற்றத்தால் மிகவே மனம் கவரப்பட்டனர். குழந்தை இயேசுவின் வசீகரம், அழகு மற்றும் நன்மைத்தனம் ஆகியவை அங்கிருந்த அனைவரிடமும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கொள்ளையன் தன் மனைவியிடம் இவ்வாறு முணுமுணுத்தான்: “இந்த எபிரேய குழந்தை சாதாரண குழந்தையைப் போன்று தெரியவில்லை. எனவே தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நம்முடைய குழந்தையை, அவருடைய குழந்தையின் குளியல் நீரில் கழுவ அனுமதிக்கும்படி அப்பெண்ணிடம் கேள். ஏனென்றால் அது நம் மகனுக்கு சில நன்மைகளைச் செய்யக்கூடும்.”


இந்த வேண்டுகோளுடன் கொள்ளையரின் தலைவனுடைய மனைவி மரியாவை அணுகுவதற்கு முன்பே, மரியா அப்பெண்ணின் பக்கம் திரும்பி, அவளுடைய பையனை அதே தண்ணீரில் கழுவும்படி அறிவுறுத்தினார். மரியாவின் வார்த்தையின்படியே, அந்த பெண் அவசரமாக அந்த அறையின் இருண்ட மூலைக்குச் சென்று, அங்கிருந்த தனது மூன்று வயது சிறுவனைத் தூக்கினாள். அவனுடைய கால்கள் தொழுநோயினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தன. அவள் தனது குழந்தையை, குழந்தை இயேசுவைக் குளிப்பாட்டிய தண்ணீர் இருந்த பாத்திரத்திற்குள் தாழ்த்தியபோது, தண்ணீர் அச்சிறுவனைத் தொட்டவுடன் அவன் உடலில் இருந்து தொழுநோய் பாதிப்புகள் செதில்களாய் வெளியேறுவதைக் கண்டாள். அச்சிறுவன் மீண்டும் தொழுநோய் முற்றிலும் நீங்கி ஆரோக்கியமாக மாறியதால் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

இதே போன்ற எதிர்கால பயன்பாடுகளுக்காக ஒரு பாறையின் துளைக்குள் அத்தண்ணீரைச் சேமிக்கும்படி மரியா அவளிடம் சொன்னார். மறுநாள் அதிகாலையில், திருக்குடும்பத்தினர் திருடர்களின் குகையில் இருந்து வெளியேற வேண்டியிருந்தபோது, அக்கொள்ளையரின் தலைவனும் அவனுடைய மனைவியும் தங்களது ஆழ்ந்த நன்றியுணர்வை அவர்களுக்கு வெளிப்படுத்தினர். இவை அனைத்தும் எகிப்துக்கு செல்லும் வழியில் இருக்கக்கூடிய ‘காசா’ என்று அழைக்கப்படும் இடத்தில் நடந்தன.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு

மரியாவின் குழந்தை புனிதத்திலும் அழகிலும் அதிசயமாக வளர்ந்தபோது, அக்கொள்ளையனின் குழந்தை துர்மார்க்கத்திலும் பாவத்திலும் வளர்ந்தது. முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. மரியாவின் மகன் மீட்பராகவும், கொள்ளையரின் தலைவருடைய மகன் திருடனுமாக கல்வாரியில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது சந்தித்துக்கொண்டார்கள். அவன் தான் நல்ல கள்வன். அவனுடைய பெயர் திஸ்மஸ். 

இதுவே கிழக்கத்திய திரு அவையின் மரபில் சொல்லப்படும் செய்தியாக இருக்கிறது. 


ஆதாரம்:

https://www.americaneedsfatima.org/Family-Series/the-legend-of-saint-dismas.html





Saturday, 26 September 2020

புனித மரியன்னை மன்றாட்டுமாலை

புனித மரியன்னை மன்றாட்டுமாலை

( புதிய மற்றும் திருத்திய தமிழ் மொழிபெயர்ப்பு)


ஆண்டவரே இரக்கமாயிரும் (2)

கிறிஸ்துவே இரக்கமாயிரும் (2)

ஆண்டவரே இரக்கமாயிரும் (2)


கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவுடன் கேட்டருளும்.


விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறைவா, 

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

உலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

தூய ஆவியாராகிய இறைவா,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.

தூய்மைமிகு மூவொரு இறைவா,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.


புனித மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியருள் புனித கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறிஸ்துவின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திரு அவையின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இரக்கத்தின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறையருளின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எதிர்நோக்கின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தூய்மைமிகு அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னிமை குன்றா அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மாசு இல்லாத அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவக் கறையில்லா அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அன்புக்குரிய அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியப்புக்குரிய அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நல்ல ஆலோசனை அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

படைத்தவரின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மீட்பரின் அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பேரறிவுமிகு கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வணக்கத்திற்குரிய கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

போற்றுதற்குரிய கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வல்லமையுள்ள கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிவுள்ள கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நம்பிக்கைக்குரிய கன்னியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நீதியின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞானத்திற்கு உறைவிடமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்கள் மகிழ்ச்சியின் காரணமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞானம் நிறைந்த பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மாட்சிக்குரிய பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பக்தி நிறைந்த பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மறைபொருளின் ரோசா மலரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாவீது அரசரின் கோபுரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தந்த மயமான கோபுரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன் மயமான கோவிலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உடன்படிக்கையின் பேழையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விண்ணகத்தின் வாயிலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விடியற்கால விண்மீனே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நோயுற்றோரின் ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துயருறுவோருக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறிஸ்தவர்களுடைய துணையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வானதூதர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முதுபெரும் தந்தையரின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவாக்கினர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருத்தூதர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மறைசாட்சிகளின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறையடியார்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அனைத்துப் புனிதர்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அமல உற்பவியான அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விண்ணேற்பு அடைந்த அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச்செபமாலையின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குடும்பங்களின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அமைதியின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இந்திய நாட்டின் அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,

எங்கள் மேல் இரக்கமாயிரும்.


இறைவனின் புனித அன்னையே! இதோ உம் அடைக்கலம் நாடி வந்தோம். எங்கள் தேவைகளில் எங்களைப் புறக்கணியாதேயும். மாட்சிக்குரிய கன்னியே! விண்ணுலகப் பேறுபெற்ற அரசியே! அனைத்துத் துன்பங்களிலிருந்தும் எங்களைக் காத்தருளும். 

முதல்வர்: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி

அனைவரும்: இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மன்றாடுவோமாக!

இறைவா முழு மனத்துடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தைக் கண்ணோக்கியருளும். எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால் பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென். 


--------------

நன்றி: நம் வாழ்வு வார இதழ்


Wednesday, 23 September 2020

புனித மரியன்னை மன்றாட்டுமாலை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனித மரியன்னை மன்றாட்டுமாலையில் புதிதாக சேர்க்கப்பட்ட புகழுரைகள்




2020 ஜுன் 20 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருவழிபாட்டு மற்றும் அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம் வழியாக புனித மரியன்னையின் மன்றாட்டுமாலையில் இரக்கத்தின் அன்னையே, எதிர்நோக்கின் அன்னையே மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே ஆகிய மூன்று புதிய வேண்டல்களைச் சேர்த்துக்கொள்ளும்படி சுற்றறிக்கை விடுத்துள்ளார்கள். 


இரக்கத்தின் அன்னையே என்பதை திரு அவையின் அன்னையே என்பதற்குப் பின்பும், எதிர்நோக்கின் அன்னையே என்பதை இறையருளின் அன்னையே என்பதற்குப் பின்பும் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே என்பதை பாவிகளுக்கு அடைக்கலமே என்பதற்குப் பின்பும் சேர்த்து மன்றாட திருவழிபாட்டு மற்றும் அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம் பணித்துள்ளது.