புனித மரிய பவுஸ்தினாவின்
இறந்த ஆன்மாக்களுடனான சந்திப்புகள் - 2
நவம்பர் 2, 1936 அன்று இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவு நாளில் ஒரு சந்திப்பு நடந்தது. அன்று மாலை புனித மரிய பவுஸ்தினா கல்லறைக்குச் சென்றார். அங்கு சிறிது நேரம் இறைவேண்டல் செய்தார்.
“நாங்கள் சிற்றாலயத்தில் இருக்கிறோம்” என்று சொன்ன சகோதரிகளுள் ஒருவரை அவர் அங்கு பார்த்தார். அதைக் கேட்ட புனித மரிய பவுஸ்தினா உடனே தான் சிற்றாலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை புரிந்துகொண்டு, அங்கு சென்று உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கு பரிபூரணப்பலன் கிடைக்க இறைவேண்டல் செய்தார்.
அடுத்த நாள் திருப்பலிக்குச் சென்றபோது அவர், மூன்று வெள்ளை புறாக்கள் பலிபீடத்தில் இருந்து வானத்தை நோக்கி உயரப் பறந்ததைப் பார்த்தார். அதிலிருந்து மூன்று ஆன்மாக்கள் விண்ணப் பேரின்பம் சென்றதாகப் அவர் புரிந்துகொண்டார். இந்நிகழ்வையும் அவர் தம்முடைய நாட்குறிப்பில் எழுதுகிறார். (எண். 748).