தூய்மை பெறும் (உத்தரிக்கும்) நிலையில் உள்ள ஆன்மாக்களுக்காக செபிப்பதால் என்ன நடக்கும்?
அவர்களுக்கு:
- உத்தரிக்கும் ஆன்மாக்கள் விரைவில் விண்ணகத்தில் நுழையும்.
- துன்பங்களிலிருந்து உத்தரிக்கும் ஆன்மாக்கள் விடுதலை பெறுவர்.
- கடவுளை நேருக்கு நேர் முக முகமாய்ப் பார்த்து மகிழ்வர்.
- கடவுளில் அவர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவு பெறும்.
நமக்கு:
- நாம் உதவிய ஆன்மாக்கள் நம்மிடம் சிறப்பு அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பர்.
- அவர்கள் நமது மீட்பைப் பற்றி அக்கறை கொண்டிருப்பர்.
- அவர்களின் செபங்கள் நம் தவறுகளை அடையாளம் காண உதவுகின்றன. எனவே நாம் நமது பாவத்தின் தீமையை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
- நாம் நேரடியாக விண்ணகத்திற்குச் செல்ல நமக்கு உதவுவதில் அவர்கள் பங்கு சிறப்பானது. அவர்களின் தூண்டுதலுக்குச் செவிசாய்த்தால், நாம் நிச்சயம் உத்தரிக்கும் நிலையைத் தவிர்க்கலாம்.