Wednesday, 8 November 2023

கல்லறைப் பாடம் - 8

தூய்மை பெறும் (உத்தரிக்கும்) நிலையில் உள்ள  ஆன்மாக்களுக்காக செபிப்பதால் என்ன நடக்கும்? 



அவர்களுக்கு: 

- உத்தரிக்கும் ஆன்மாக்கள் விரைவில் விண்ணகத்தில் நுழையும்.

- துன்பங்களிலிருந்து உத்தரிக்கும் ஆன்மாக்கள் விடுதலை பெறுவர்.

- கடவுளை நேருக்கு நேர் முக முகமாய்ப் பார்த்து மகிழ்வர்.

- கடவுளில் அவர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவு பெறும். 


நமக்கு: 

- நாம் உதவிய ஆன்மாக்கள் நம்மிடம் சிறப்பு அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பர்.

- அவர்கள் நமது மீட்பைப் பற்றி அக்கறை கொண்டிருப்பர். 

- அவர்களின் செபங்கள் நம் தவறுகளை அடையாளம் காண உதவுகின்றன. எனவே நாம் நமது பாவத்தின் தீமையை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

- நாம் நேரடியாக விண்ணகத்திற்குச் செல்ல நமக்கு உதவுவதில் அவர்கள் பங்கு சிறப்பானது. அவர்களின் தூண்டுதலுக்குச் செவிசாய்த்தால், நாம் நிச்சயம் உத்தரிக்கும் நிலையைத் தவிர்க்கலாம்.