Thursday, 28 March 2024

தோள் துகிலுக்கு முத்தம்

 தோள் துகிலுக்கு முத்தம்


நான் தோள் துகிலை அணியும்போதும், கழற்றும்போதும் அதை முத்தமிடுவேன். 

ஏனென்றால், பரிதாபத்துக்குரிய என் சுயத்தை விட குருத்துவம் பெரிது. தகுதியற்ற நான் ஒரு மாபெரும் பரிசைப் பெற்றிருக்கிறேன் என்பதை இந்த தோள் துகில் எனக்கு நினைவூட்டுகிறது.

ஏனென்றால் தோள் துகில் அணிந்த நிலையில், கிறிஸ்துவின் இடத்தினின்று நான் பேசுவதும் செயல்படுவதும் எனது புனிதமான பாக்கியம்.

ஏனென்றால், என் குருத்துவ அருள்பொழிவில் நான் முதன்முறையாக தோள் துகிலை அணிந்த அப்பொன்னாளில், நான் கடவுளின் அருளால் மட்டுமே இதனைக் காப்பாற்ற முடியும் என்று வாக்குறுதி அளித்தேன்.

ஏனென்றால், கிறிஸ்து அளிக்கும் நுகத்தடியை நான் என்மீது ஏற்றுக்கொள்வதால், அவருடன் நான் ஒன்றித்திருக்கும்போதுதான் நான் நிறை பலனளிக்க முடியும், இளைப்பாற முடியும்.

ஏனென்றால், தோள் துகில் என்பது கடவுள் என்னை அருள்பணியாளராக அனுப்பும் மக்களுடனான எனது பிணைப்பு. தோள் துகில் அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய பணியின் அடையாளம். தோள் துகில் அணிந்து, நான் திருமுழுக்கின் வழியாக அவர்களை திரு அவையில் சேர்க்கிறேன், அவர்களின் பாவங்களை மன்னித்து, கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் அவர்களுக்கு வழங்குகிறேன், புனித திருமணத்தில் அவர்களை ஒன்றிணைத்து, நோயில்பூசுதலில் அவர்களை ஆறுதல்படுத்துகிறேன். 

ஏனென்றால், நான் இறக்கும் நாளில், இறுதி மூச்சுவிடும்போது, யாராவது தோள் துகிலை என் உதடுகளில் வைத்திருப்பதால், வாழ்நாள் முழுவதும் நான் கடவுளின் பணியாற்றிய உன்னத கொடைக்காக அவருக்கு நன்றி சொல்ல முடியும் என வேண்டுகிறேன். 

(நானும் தோள் துகிலுக்கு அன்பு முத்தம் தர மறந்ததில்லை.) 

குருத்துவத் திருநாள் வாழ்த்துகள்! 

தமிழாக்கம் 

அருள்பணி. மரியசூசை, 

திருச்சி மறைமாவட்டம்.