கல்லறைப் பாடம் - 13
இறந்த நம்பிக்கையாளர் நினைவு நாளில் 3 திருப்பலிகள்
இறந்த நம்பிக்கையாளர் நினைவு தினத்தில், அருள்பணியாளர்கள் மூன்று திருப்பலிகளைக் கொண்டாட அனுமதிக்கப்படுகிறார்கள்.
வரலாற்றுச் சூழல்
1915 ஆம் ஆண்டில், திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் முதல் உலகப் போரின்போது, அதிக எண்ணிக்கையிலான போர் இறப்புகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஆலயங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாக, இறந்த நம்பிக்கையாளர் நினைவு தினத்தில், மூன்று திருப்பலிகளைக் கொண்டாடும் அனுமதியை அருள்பணியாளர்களுக்கு வழங்கினார்.
பின்வரும் கருத்துக்களுக்காக மூன்று திருப்பலிகள் கொண்டாடப்படுகிறது:
முதல் திருப்பலி: அன்றைய ஒரு குறிப்பிட்ட கருத்திற்காக
இரண்டாவது திருப்பலி: இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவருக்குமாக
மூன்றாவது திருப்பலி: திருத்தந்தையின் கருத்துக்களுக்காக