கல்லறைப் பாடம் - 15
இறந்த இராணுவ வீரர்களது ஆன்மாக்களின் காட்சி
1675 ஆம் ஆண்டு துருக்கிக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்றது. அச்சமயம் புனித நிக்கோலஸ் உக்ரைன் இராணுவத்தில் ஆன்மிக அருள்பணியாளராக பணியாற்றினார். ஒருமுறை போரில் இறந்த இராணுவ வீரர்களின் ஆன்மாக்களது காட்சியை இவர் பெற்றார். அக்காட்சியில், உத்தரிக்கும் நிலையில் இருந்த அந்;த ஆன்மாக்கள் தங்களின் விடுதலைக்காக இவரிடம் பரிந்துரை செபங்களைக் கேட்டன.
தன்னுடைய துறவு இல்லத்திற்குத் திரும்பியதும், இறந்தவர்களுக்காக, குறிப்பாகப் போரில் இறந்த இராணுவ வீரர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டுதல் செய்யவும், மன்த்துயர் மன்றாட்டு செபிக்கவும், பிறரன்புச் செயல்களைச் செய்யவும் தனது தோழர்களை அழைத்தார்.