கல்லறைப் பாடம் - 16
பரவச நிலையில் உத்தரிக்கும் ஆன்மாக்களின் காட்சி
புனித நிக்கோலஸ் கோராபியூ என்னும் இடத்தில் தம்முடைய துறவற குழுமத்தைத் தொடங்கிய சில நாள்களுக்குப் பிறகு இந்நிகழ்வு நடைபெற்றது. ஒருநாள் திருப்பலிக்குப் பின்பு அனைவரும் உணவருந்தச் சென்றனர். அவ்வேளையில் பலரின் முன்பாக நிக்கோலஸ் பரவச நிலைக்குச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் பரவச நிலையிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.
அப்போது அவர் தம்முடைய துறவற சபையினரைப் பார்த்து பின்வருமாறு கூறினார்: “ சகோதரர்களே, உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்காக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், அவர்களுக்காக செபியுங்கள். ஏனென்றால் அங்கு அவர்கள் தாங்க முடியாத துன்பங்களை அனுபவிக்கிறார்கள்."
அந்த நிகழ்வுப் பிறகு, அவர் வெளியே வராமல், தனது அறையிலேயே பல நாள்கள் தங்கியிருந்தார். உத்தரிக்கும் நிலையில் இருக்கும் ஆன்மாக்களுக்காக கடுமையான இறைவேண்டலிலும், நோன்பிலும் ஈடுபட்டார்.