Sunday, 24 November 2024

கல்லறைப் பாடம் - 24

கல்லறைப் பாடம் - 24

நரகம் என்பது கடவுளை முற்றிலும் நிராகரிப்பதே!


தங்கள் சாவான பாவங்களுக்காக மனம் வருந்தாத மனிதர்கள், கடவுளுடனான ஒன்றிப்பை இழக்கிறார்கள். அதனால் அவர்கள் நிரந்தர துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்று விவிலியம் மீண்டும் மீண்டும் கற்பிக்கிறது. “மனந்திரும்பாமல், கடவுளின் இரக்கமிகு அன்பை ஏற்றுக்கொள்ளாமல் சாவான பாவத்தில் இறப்பது என்பது, நம்முடைய சொந்த விருப்பத்தின் மூலம் கடவுளிடமிருந்து என்றென்றும் பிரிந்து வாழ்வதாகும். கடவுள் மற்றும் புனிதர்களுடன் ஒன்றிப்பு கொள்வதில் இருந்து தன்னைத் தானே ஒதுக்கிவைக்கும் இந்த நிலை “நரகம்” என்று அழைக்கப்படுகிறது". (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி 1033) 

நல்ல கடவுள் நரகத்திற்குப் பொறுப்பல்ல 

கடவுள் யாரையும் நிரந்தரமான தண்டனைக்கு முன்னிறுத்துவதில்லை. ஒரு மனிதரே தனது இறுதி இலக்கை கடவுளுக்கு வெளியேயும் எதிராகவும் தேடுவதன் மூலம், கடவுளின் பேரொளியும் பேரன்பும் ஊடுருவ முடியாத ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உலகத்தை தனக்கு உருவாக்கிக் கொள்கிறார். அதுவே நரகமாகிறது.