கல்லறைப் பாடம் - 25
விண்ணகம்
விண்ணகம் என்பது ஒப்புயர்வற்ற நிலையான பேரின்பம் ஆகும். இறை அருளில் இறப்போர் தூய்மை பெறத் தேவையற்றோர். இயேசு, மரியா, வானதூதர்கள், புனிதர்கள் ஆகியோருடன் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கடவுளை நேரில் காண்கின்ற விண்ணகத் திரு அவையை உருவாக்குகிறார்கள். அவர்கள் தூய்மைமிகு மூவொரு இறைவனோடு அன்புறவில் வாழ்ந்து நமக்காகப் பரிந்துபேசுகிறார்கள்.
விண்ணகத் திரு அவையை வெற்றிவாகை சூடிய திரு அவை என்றும், அகமகிழும் திரு அவை என்றும் அழைக்கிறோம்.