Sunday, 31 May 2020

அன்னையை அறிவோம் - 31


 அன்னையை அறிவோம் - 31
  
(மரியன்னைக்கான பொன்மொழிகளும் புகழ்வரிகளும்)



1.‘பழைய பாம்பு தன் சாவுக்குரிய நஞ்சை ஏவாள் வழியாக மனிதருக்குள் புகுத்தியதுமீட்பு தரும் மாற்று மருந்தை மனிதருக்கு தயாரித்துத் தந்தார் மரியா’. – புனித பெர்னாந்து.

2.‘ஏவாளைத் தொடர்ந்து இருளும் இடர்பாடுகளும்மருளும் மரணமும் வந்தனமரியாவைத் தொடர்ந்து அருளும் ஒளியும்அன்பும் வாழ்வும் வந்தன’. – புனித புருனோ

3. ‘ஏவாள் அலகையினால் ஆட்கொள்ளப்பட்டாள்மரியா அலகையையே ஆட்டிப்படைத்தார்’. – புனித புருனோ

4.  ‘அன்னை மரியாவை அதிகமாய் அன்பு செய்ய அச்சப்பட வேண்டாம்இயேசுவைவிட அதிகமாய் நீங்கள் அன்பு செய்துவிட முடியாது’. – புனித மேக்சி மில்லியன் கோல்பே

5. ‘அன்னைக்கு ஊழியம் செய்யாமல் ஒருவரும் அவர் மகனின் ஊழியர்களாக முடியாது’. – ஆயர் ஹில்டப்போன்ஸ்

6. ‘மரியா தன் கீழ்ப்படிதலால் தானும் மனித இனம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக்காரணமானார்’. – புனித இரேனேயுஸ்

7.‘செபமாலையை தக்க விதமாக செபிக்கிறவன் ஒருபோதும் சேதம் ஆக மாட்டான்இதை நான் என் இரத்தத்தில் எழுதித்தர தயாராக இருக்கிறேன்’. - புனித லூயி மான்போர்ட்

8. ‘அன்னையின் காட்சிகள் வழியாக இயேசு உலகில் தம் அன்னைக்குரிய இடத்தை வெளிப்படுத்துகிறார்’. – ரெனே லொராந்தன்

9. ‘கிறிஸ்து இன்றும் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம் அவருடைய தாய் அறியப்படாமல் இருப்பதே’. – கர்தினால் புனித ஹென்றி நியூமன்

10. ‘கன்னி மரியாவின் உதவி இல்லாமல் அருளை விரும்புவது இறக்கைகள் இல்லாமல் பறப்பதற்கு ஆசைப்படுவதாகும்’. – திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்


Saturday, 30 May 2020

அன்னையை அறிவோம் - 30


 அன்னையை அறிவோம் - 30
  
(மரியன்னைக்கான பொன்மொழிகளும் புகழ்வரிகளும்)




1.'என்னிடம் செபமாலையைச் செபிக்கும் ஒரு படையிருந்தால் அதைக்கொண்டு உலகத்தையே மனந்திருப்பி விடுவேன்’ - திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர்

2. ‘அன்னையை அழைத்தால் அதன் எதிரொலி இயேசு என்று ஒலிக்கும்’ - புனித லூயி மான்போர்ட்.

3.  ‘செபமாலை கிறித்தவ மக்களை உயர்த்தும்’ - திருத்தந்தை 3 ஆம் உர்பன்.

4. ‘மரியாவின் நாமம் தேனை விட நாவுக்கு இனிமையானதுபரவசப்படுத்தும் பாட்டை விட செவிக்கு இனிமை தருவது’ - புனித அந்தோனியார்.

5. ‘மரியா இயேசுவை தனது உதிரத்தில் தாங்கும் முன்பே உள்ளத்தில் தாங்கினார்’ - புனித அகுஸ்தினார்.

6. ‘செபமாலையை நீ நன்றாக சொன்னால் செபங்களில் அதுவே சிறந்த செபமாகும்’ - புனித பிரான்சிஸ்கு சலேசியார்.

7.  ‘என் உடல் முழுவதும் நாவாக மாறினாலும் அன்னையின் புகழைப் பாடித் தீர்க்க முடியாது’. - புனித பொன்வாய் அருளப்பர்.

8. ‘கிறிஸ்துவை அறிய வேண்டுமாஅன்னை மரியாவிடம் செல்லுங்கள்’. - திருத்தந்தை ஆறாம் பவுல்.

9. ‘ஏவாள் நமக்கு சாவைக் கொண்டு வந்தார்மரியாவோ நமக்கு வாழ்வைக் கொண்டு வந்தார்’. – புனித எப்ரேம்

10.‘ஏவாளின் கீழ்ப்படியாமையால் விளைந்த முடிச்சு மரியாவின் கீழ்ப்படிதலால் அவிழ்க்கப்பட்டதுநம்பிக்கையின்மையால் கன்னி ஏவாள் கட்டியதை நம்பிக்கையால் கன்னி மரியா அவிழ்த்துவிட்டாள்’. – புனித இரேனியுஸ்


Friday, 29 May 2020

அன்னையை அறிவோம் - 29


அன்னையை அறிவோம் - 29

(மரியன்னைக்கான பொன்மொழிகளும் புகழ்வரிகளும்)

  

1. ‘மரியாவின் பிள்ளை அவலமாய் சாகாது’. - புனித தொன் போஸ்கோ.

2.‘மாலுமிகள் விடிவெள்ளியின் பிரகாசத்தால் துறைமுகத்துக்கு வழிநடத்தப்படுவதைப் போல்கிறிஸ்தவர்கள் மரியாவால் மோட்சத்திற்கு வழிநடத்தப்படுகிறார்கள்’. - புனித தாமஸ் அக்குவினாஸ் 

3. ‘நான் திரு அவையில் இல்லாவிட்டாலும் எனக்கு கவலையில்லைதேவ அன்னையை வணங்க மட்டும் என்னை அனுமதித்தால் போதும்’ -  ஜெஸ்டர்டன்.

4. ‘நற்செய்தியின் சுருக்கம் செபமாலை’ - திருத்தந்தை 6 ஆம் பத்திநாதர்.

5. ‘செபமாலையை விட பெரிய புதையல் எதுவும் இல்லை’ - திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர்.

6.‘செபமாலை என் விருப்பத்துக்குரிய செபம்அது அற்புதமான செபம்ஏனென்றால் அது எளிமையையும்ஆழத்தையும் கொண்டது’. திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் 

7. 'அன்னையைப் பின்பற்றுவோர் வழி தவறியதில்லைஅவள் உதவியை நாடுவோர்அவளைப்பற்றி சிந்திப்பவர்கள் தவறான பாதையில் செல்வதில்லை’ - புனித பெர்னார்டு.

8. ‘இறைவனுடைய இரக்கம் புதையலாக அவள் கைகளில் உள்ளது’- புனித பீட்டர் தமியன்.

9. ‘மரியன்னையை உன் உள்ளத்தில் வைத்தால் இயேசு உன் உள்ளத்தில் வளருவார்’ - பேராயர் புல்டன் ஷீன்.

10.‘தன் மகனுக்கு மேல் தன்னைப் புகழ்வதை அன்னை ஒருபோதும் விரும்புவதில்லை’ - திருத்தந்தை 23 ஆம் யோவான் பவுல்.