அன்னையை அறிவோம் - 29
(மரியன்னைக்கான பொன்மொழிகளும் புகழ்வரிகளும்)
1. ‘மரியாவின் பிள்ளை அவலமாய் சாகாது’. - புனித தொன் போஸ்கோ.
2.‘மாலுமிகள் விடிவெள்ளியின் பிரகாசத்தால் துறைமுகத்துக்கு வழிநடத்தப்படுவதைப் போல், கிறிஸ்தவர்கள் மரியாவால் மோட்சத்திற்கு வழிநடத்தப்படுகிறார்கள்’.
- புனித தாமஸ் அக்குவினாஸ்
3. ‘நான் திரு அவையில் இல்லாவிட்டாலும் எனக்கு கவலையில்லை, தேவ அன்னையை வணங்க மட்டும் என்னை அனுமதித்தால் போதும்’ - ஜெஸ்டர்டன்.
4. ‘நற்செய்தியின் சுருக்கம் செபமாலை’ - திருத்தந்தை 6 ஆம் பத்திநாதர்.
5. ‘செபமாலையை விட பெரிய புதையல் எதுவும் இல்லை’ - திருத்தந்தை 9 ஆம் பத்திநாதர்.
6.‘செபமாலை என் விருப்பத்துக்குரிய செபம். அது அற்புதமான செபம். ஏனென்றால் அது எளிமையையும், ஆழத்தையும் கொண்டது’. திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல்
7. 'அன்னையைப் பின்பற்றுவோர் வழி தவறியதில்லை, அவள் உதவியை நாடுவோர், அவளைப்பற்றி சிந்திப்பவர்கள் தவறான பாதையில் செல்வதில்லை’ - புனித பெர்னார்டு.
8. ‘இறைவனுடைய இரக்கம் புதையலாக அவள் கைகளில் உள்ளது’- புனித பீட்டர் தமியன்.
9. ‘மரியன்னையை உன் உள்ளத்தில் வைத்தால் இயேசு உன் உள்ளத்தில் வளருவார்’ - பேராயர் புல்டன் ஷீன்.
10.‘தன் மகனுக்கு மேல் தன்னைப் புகழ்வதை அன்னை ஒருபோதும் விரும்புவதில்லை’ - திருத்தந்தை 23 ஆம் யோவான் பவுல்.