Thursday, 28 May 2020

அன்னையை அறிவோம் - 28


அன்னையை அறிவோம் - 28





1. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும்கன்னியே என்கிற புகழுரைகள்மொத்தம் எத்தனை6.

2. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் கன்னியே என்கிற புகழுரைகளைக் கூறு

  •  பேரறிவுமிகு கன்னியே
  •  வணக்கத்திற்குரிய கன்னியே
  •  போற்றுதற்குரிய கன்னியே 
  •  வல்லமையுள்ள கன்னியே
  •  பரிவுள்ள கன்னியே
  •  நம்பிக்கைக்குரிய கன்னியே


3. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் மரியாவின் பண்புகளைச் சாற்றும் புகழுரைகள் மொத்தம் எத்தனை6.

4. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் மரியாவின் பண்புகளைச் சாற்றும் புகழுரைகளைக் கூறு?

  •  நீதியின் கண்ணாடியே
  •  ஞானத்திற்கு உறைவிடமே
  •  எங்கள் மகிழ்ச்சியின் காரணமே
  •  ஞானம் நிறைந்த பாத்திரமே
  •  மாட்சிக்குரிய பாத்திரமே
  •  பக்தி நிறை பாத்திரமே


5. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும்பழைய ஏற்பாட்டு உருவகப் புகழுரைகள்மொத்தம் எத்தனை7.

6. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் பழைய ஏற்பாட்டு உருவகப் புகழுரைகளைக் கூறு?

  •  மறைபொருளின் ரோசா மலரே
  •  தாவீது அரசரின் கோபுரமே
  •  தந்த மயமான கோபுரமே
  •  பொன் மயமான ஆலயமே
  •  உடன்படிக்கையின் பேழையே
  •  விண்ணகத்தின் வாயிலே
  •  விடியற்காலை விண்மீனே


7. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும்மக்கள் தொடர்புடைய புகழுரைகள்மொத்தம் எத்தனை? அவை யாவை? 

மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் ‘மக்கள் தொடர்புடைய புகழுரைகள்’ மொத்தம் 5.

  •  நோயுற்றோரின் ஆரோக்கியமே
  •  பாவிகளுக்கு அடைக்கலமே
  •  துயருறுவோருக்குத் ஆறுதலே
  •  கிறிஸ்தவர்களுடைய துணையே (சகாயமே)
  •  புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே


8. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும்அரசியே என்கிற புகழுரைகள்மொத்தம் எத்தனை13.

9. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் காணப்படும் அரசியே என்கிற புகழுரைகளைக் கூறு?

  •  வானதூதர்களின் அரசியே 
  •  முதுபெரும் தந்தையரின் அரசியே 
  •  இறைவாக்கினர்களின் அரசியே 
  •  திருத்தூதர்களின் அரசியே 
  •  மறைசாட்சிகளின் அரசியே 
  •  இறையடியார்களின் அரசியே 
  •  கன்னியரின் அரசியே
  •  அனைத்துப் புனிதர்களின் அரசியே 
  •  அமல உற்பவியான அரசியே 
  •  விண்ணேற்பு பெற்ற அரசியே 
  •  திருச் செபமாலையின் அரசியே
  •  குடும்பங்களின் அரசியே 
  •  அமைதியின் அரசியே

10. மரியன்னையின் மன்றாட்டுமாலையில் 2020 ஜுன் 20 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இணைத்த புதிய புகழுரைகள் யாவை?

- இரக்கத்தின் அன்னையே
- எதிர்நோக்கின் அன்னையே 
- புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே