அன்னையை அறிவோம் - 21
1. மங்கள வார்த்தை மன்றாட்டு விவிலிய அடிப்படை கொண்டதா? ஆம்.
2. ‘அருள் நிறைந்த மரியே வாழ்க. ஆண்டவர் உம்முடனே’ - இதன் அடிப்படை விவிலியத்தில் எங்கு உள்ளது? லூக்கா 1:28
3. ‘பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே’ – இதன் அடிப்படை விவிலியத்தில் எங்கு உள்ளது? லூக்கா 1:42
4. ‘புனித மரியே, இறைவனின் தாயே’ - இதன் அடிப்படை விவிலியத்தில் எங்கு உள்ளது? லூக்கா 1:43
5. ‘பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்’. - இதன் அடிப்படை விவிலியத்தில் எங்கு உள்ளது? யாக்கோபு 5:16
6. மரியாவுக்கும் மூவொரு இறைவனுக்குமான உறவு யாது? தந்தையாகிய இறைவனின் மகள், இறைமகன் இயேசுவின் தாய், தூய ஆவியாரின் மணமகள்.
7. மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை மரியன்னை யாருக்கு காட்சியளித்தபோது வழங்கினார்? 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித மெக்டில்டாவுக்கு.
8. மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சி என்றால் என்ன?
இது மரியன்னையோடு சேர்ந்து மூவொரு கடவுளுக்கு நன்றி செலுத்தும் பக்தி முயற்சி.
- தந்தையாகிய இறைவன் மரியாவுக்கு வழங்கிய மேலான வல்லமைக்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டு.
- இறைமகன் இயேசு மரியாவுக்கு வழங்கிய ஞானத்திற்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டு.
- தூய ஆவியாராம் இறைவன் மரியாவுக்கு வழங்கிய அன்பு மற்றும் இரக்கத்திற்காக ஓர் அருள் நிறைந்த மரியே மன்றாட்டு.
9. மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சியை ஒப்புரவு அருளடையாளத்தில் பாவப் பொறுத்தலாக வழங்கிய புனிதர் யார்? புனித போர்ட் மௌரீஸ் லியோனார்டு.
10. மூன்று அருள் நிறைந்த மரியே மன்றாட்டு பக்தி முயற்சிக்கு தனது திருத்தூது ஆசீரை வழங்கிய திருத்தந்தை யார்? திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர்.