Wednesday, 6 May 2020

அன்னையை அறிவோம் - 6


அன்னையை அறிவோம் - 6




1. செபமாலையில் தியானிக்கப்படும் மறையுண்மைகள் மொத்தம் எத்தனை20

2. செபமாலையின் மகிழ்ச்சியின் மறையுண்மைகள் யாவை?
கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்கு மங்கள வார்த்தை கூறியது
கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தது
இயேசு பிறந்தது
இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது
காணாமல்போன இயேசுவை ஆலயத்தில் கண்டடைந்தது

3.  செபமாலையின் ஒளியின் மறையுண்மைகள் யாவை?
இயேசுவின் திருமுழுக்கு
கானாவில் இயேசுவின் முதல் புதுமை
இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு
இயேசுவின் உருமாற்றம்
இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது

4. செபமாலையின் துயர்நிறை மறையுண்மைகள் யாவை?
இயேசு இரத்த வியர்வை சிந்தியது
இயேசு கற்றூணில் கட்டி அடிக்கப்பட்டது
இயேசுவுக்கு முள்முடி சூட்டியது
இயேசு சிலுவை சுமந்து சென்றது
இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டது

5. செபமாலையின் மகிமைநிறை மறையுண்மைகள் யாவை?
இயேசு உயிர்த்தது
இயேசு விண்ணேற்றம் அடைந்தது
தூய ஆவியாரின் வருகை 
மரியாவின் விண்ணேற்பு
மரியா மண்ணக, விண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டது

6. செபமாலையின் ஒளியின் மறையுண்மைகளை எந்த திருத்தந்தை எப்போது பிரகடனப்படுத்தினார்திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், 2002 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் தேதி செபமாலை அன்னை திருவிழாவன்று.

7. செபமாலையை நம்பிக்கையாளரின் அடையாள அட்டை என்று கூறியவர் யார்திருத்தந்தை 13 ஆம் லியோ (சிங்கராயர்)

8. திருத்தந்தை 13 ஆம் லியோ (சிங்கராயர்) செபமாலையைப் பற்றி எத்தனை சுற்று மடல்கள் எழுதியுள்ளார்12 சுற்று மடல்கள்

9. வேத போதக செபமாலையை தோற்றுவித்தவர் யார்பேராயர் ஃபுல்டன்  ஷீன்.

10. வேத போதக செபமாலையின் நிறங்களும் அதன் கண்டங்களும் யாவைஆப்பிரிக்கா-பச்சை, ஆஸ்திரேலியா-நீலம், ஐரோப்பா-வெள்ளை, ஆசியா-மஞ்சள், அமெரிக்கா-சிவப்பு.