Wednesday, 12 May 2021

வணக்க மாதம் : நாள் -12

 குருத்தோலைகளின் அன்னை 

(ஸ்பெயின் - காடிஸ்)



குருத்தோலைகளின் அன்னை ஆலயத்தில் சில காலத்திற்கு முன்பே நடந்த அதிசயம் ஒன்று புகழ் பெற்றது. அதற்கு ஏன் குருத்தோலைகளின் அன்னை என்று பெயரிடப்பட்டது என்பது குறித்த சரியான பதிவு எதுவும் இல்லை.

1755 நவம்பர் முதல் தேதி நிலநடுக்கம் மற்றும் பேரலைகளின் தாக்கத்தின் போது இந்த அதிசயம் நிகழ்ந்தது. அந்த நாளில் மிகவும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது, அது ஐரோப்பா முழுவதும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அல்ஜீசிராஸ் என்பது ஸ்பெயினின் ஒரு துறைமுகமாகும்.

அல்ஜீசிராஸின் நகர மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு ஆண்கள் நீர் வாயில்களை மூடிவிட்டு, குருத்தோலைகளின் அன்னை ஆலயத்திற்கு செல்லுமாறு மக்களை வலியுறுத்தினர். அப்போது ஆலயத்தில் திருப்பலி நடந்து கொண்டிருந்தது. 

அருள்பணியாளர் அமைதியாக திருப்பலியை முடித்துவிட்டு, கையில் குருத்து மடல்களின் அன்னையின் திருப்படத்தை ஏந்தியவாறு, தெருவில் வெளியே சென்றார். அங்கு ஏற்கனவே தண்ணீர் சுவர்களைத் தள்ளி முன்னேறிக்கொண்டிருந்தது. அப்போது அருள்பணியாளர் பெரிய அலையின் பயங்கரச் சூழலில் தெருவில் அன்னையின் படத்தை ஊன்றிவிட்டு, “இதுவரை போதும், என் அம்மா” என்று உரத்த குரலில் கத்தி வேண்டினார்.

தண்ணீர் அன்னையின் திருப்படத்தின் வரை முன்னேறியது, பின்னர் அதிசயமாக அதன் முன்னோக்கி வருவதை நிறுத்தியது. அதுவரை தண்ணீர் அதன் பாதையில் உள்ள அனைத்தையும் அழித்திருந்தாலும் கூட, அருள்பணியாளர் தனது உயர்த்தப்பட்ட கையில் அன்னையின் படத்துடன் தைரியமாக நீர் மதில் சுவரை நோக்கி நடந்து செல்லும்போது, அந்த பிரம்மாண்டமான அலை அவரிடமிருந்து விலகி, மரியன்னையின் முகத்திலிருந்து விலகி, மீண்டும் கடலுக்குத் திரும்பியது.

திருவிழா நாள்: நவம்பர் 1

செபம்: குருத்தோலைகளின் அன்னையே! வாழ்க்கையில் சரிவுகளும் சறுக்கல்களும் எங்களை அச்சத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தினாலும், நீர் உம் பிள்ளைகளாகிய எங்களோடு எப்போதும் உடனிருந்து உதவி செய்யும்.  ஆமென்.