Wednesday, 27 November 2024

கல்லறைப் பாடம் - 27

கல்லறைப் பாடம் - 27

டைபாய்டு காய்ச்சலிலிருந்து பிழைத்த இளைஞன்



சிர்போன்டைன்னஸ் என்னும் சபையின் அதிபர் இந்நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.

ஓர் இளைஞன் டைபாய்டு காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டு, ஆபத்தான நிலையில் இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் மிகுந்த துக்கத்தில் மூழ்கி, உத்தரிக்கும் ஆன்மாக்களிடம் தங்கள் மகனுக்காகச் செபிக்கும்படி அந்த அதிபரிடம் கேட்டார்கள்.

அன்று சனிக்கிழமை. அந்த இளைஞன் மரணத்தின் வாசலில் இருந்தான். மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அனைத்தும் வீணானது. அவர்களால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. அவர்கள் விரக்தியில் இருந்தனர்.

ஆனால் அதிபர் மட்டும் சொன்னார்: “எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பரிசுத்த ஆன்மாக்களின் வல்லமையை நான் நன்கு அறிவேன், ஏனென்றால் அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.”

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிபர் உத்தரிக்கும் ஆன்மாக்களிடம் நோய்வாய்ப்பட்ட இளைஞருக்காக உருக்கமாக செபிக்குமாறு அனைவரிடமும் கேட்டேன். அனைவரும் செபித்தோம்.

திங்கட்கிழமை அன்று ஆபத்து கட்டத்தைத் தாண்டி, அந்த இளைஞன் குணமடைந்தான்.