கல்லறைப் பாடம் - 28
புற்றுநோயிலிருந்து நலம்
ஜோனா தி மெனிசஸ் என்னும் பெண்மணி தனது குணம் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
காலில் தனக்கு ஏற்பட்ட புற்றுநோயால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு சோகத்தில் ஆழ்ந்தார். அச்சமயத்தில் உத்தரிக்கும் நிலையிலுள்ள ஆன்மாக்களின் வல்லமையைப் பற்றி அவர் கேள்விப்பட்டதை நினைவில் வைத்துக் கொண்டு, அவர்கள் மீது தனது முழு நம்பிக்கையையும் வைக்க முடிவு செய்தார்.
மேலும் அவர்களுக்காக ஒன்பது திருப்பலிகளை ஒப்புக்கொடுத்தார். அதனால் அவர் குணமடைந்தால் பரிசுத்த ஆன்மாக்களுக்காக சாட்சியம் அளிப்பதாக உறுதியளித்தார். படிப்படியாக வீக்கம் குறைந்து, கட்டி மற்றும் புற்றுநோய் முற்றிலும் மறைந்தது. இவ்வாறு அவர் முழுமையான சுகம் அடைந்தார்.