Tuesday, 26 May 2020

அன்னையை அறிவோம் - 26


அன்னையை அறிவோம் - 26




1. புனித மெஜீகொரி அன்னை தன்னுடைய காட்சியில் தனது பெயராக எதைக் குறிப்பிட்டார்நான்தான் அருள் நிறைந்த கன்னி மரியா. 

2. எந்த செபம் சொல்லி செபித்தபோது புனித மெஜீகொரி அன்னை சிரித்த முகத்தோடு இருந்தார்நம்பிக்கை அறிக்கை.

3. புனித மெஜீகொரி அன்னை எல்லா காட்சிகளின் இறுதியிலும் சொல்லியது என்னகடவுளின் அமைதியில் சென்று வாருங்கள்’.

4. உத்தரிக்கும் நிலையில் இருக்கும் ஆன்மாக்கள் அங்கிருந்து விடுதலை பெற்று விண்ணகம் போகும் நாளாக புனித மெஜீகொரி அன்னை தன்னுடைய காட்சியில் எந்த நாளைக் கூறினார்கிறிஸ்து பிறப்பு நாளில்.

5. மெஜீகொரியில் காட்சியளித்தபோது அன்னையின் தலையைச் சுற்றிலும் என்ன காணப்பட்டனவட்ட வடிவத்தில் 12 தங்க நட்சத்திரங்கள் மின்னின

6. மெஜீகொரியில் காட்சியளித்தபோது அன்னை எந்த  நிறத்தில் மேலாடை  அணிந்திருந்தார்சாம்பல் நிற மேலாடை.  

7. மெஜீகொரியில் காட்சியளித்தபோது அன்னை எந்த நிறத்தில் தலை முக்காடு அணிந்திருந்தார்வெள்ளை நிற தலை முக்காடு

8. மெஜீகொரியில் நடந்த அன்னையின் காட்சிகளின் மட்டில் நேர்மறையான தனிப்பட்ட அக்கறை கொண்டிருந்த திருத்தந்தை யார்திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல்.

9. மெஜீகொரி அன்னையின் காட்சியைப் பற்றி அதிகமான நூல்களை எழுதியவர் யார்அருள்பணியாளர். லொரண்டைன்.

10. மெஜீகொரியில் நடந்த அன்னையின் காட்சிகளை திரு அவை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்துள்ளதாஇல்லை. காட்சிகளுக்கு இதுவரை திரு அவையின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் எதுவும் இல்லை. 2019 ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் மெஜீகொரிக்கு திருப்பயணம் செல்வதை மட்டும் அங்கீகரித்துள்ளார்


Monday, 25 May 2020

அன்னையை அறிவோம் - 25


அன்னையை அறிவோம் - 25




1.       கிறிஸ்தவர்களின் சகாய அன்னையே என்கிற புகழுரை மரியன்னையின் மன்றாட்டு மாலையில் யாரால் சேர்க்கப்பட்டதுதிருத்தந்தை 5 ஆம் பத்திநாதரால்

2.        மே 24 இல் கொண்டாடப்படும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னை விழா எப்போதிலிருந்து வழக்கத்திற்கு வந்தது1809 ஆம் ஆண்டு நெப்போலியனின் படை திருத்தந்தை ஏழாம் பத்திநாதரை சிறை பிடித்தது. 5 ஆண்டுகளுக்குப் பின்பு அதாவது 1814 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி நெப்போலியனின் அடிமைத்தனத்தில் இருந்து திருத்தந்தை விடுதலையானார். அதிலிருந்து 12 மாதங்களுக்குப் பின்பு அதாவது 1815 ஆம் ஆண்டு திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் தன்னுடைய விடுதலையின் நினைவாக, சிறை வைக்கப்பட்டபோது அன்னையிடம் வேண்டிக்கொண்டதற்கேற்ப, கிறிஸ்தவர்களின் சகாய அன்னை திருவிழாவினை ஏற்படுத்தி மே 24 ஆம் தேதி இவ்விழாவை உலகம் முழுவதும் கொண்டாட ஆணையிட்டார்

3.       கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மீது அதிகமான பக்தியைக் கொண்டிருந்த புனிதர் யார்புனித தொன் போஸ்கோ.

4.       கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பக்தியை உலகம் முழுவதும் பரப்பும் துறவற சபை எதுசலேசிய சபை

5.       கிறிஸ்தவர்களின் சகாய அன்னைக்காக கட்டப்பட்ட முதல் பேராலயம் எங்குள்ளதுஇத்தாலியிலுள்ள தூரின் என்கிற நகரில் உள்ளது

6.       கிறிஸ்தவர்களின் சகாய அன்னைக்கான முதல் பேராலயத்தை கட்டியவர் யார்? எப்போது கட்டப்பட்டதுபுனித தொன் போஸ்கோ – 1868. 

7.       புனித தொன் போஸ்கோ மரியன்னையை எப்படி அழைப்பார்மடோனா

8.       ஆஸ்திரேலியாவின் பாதுகாவலியாக கிறிஸ்தவர்களின் சகாய அன்னையை அறிவித்த திருத்தந்தை யார்? எப்போதுதிருத்தந்தை 13 ஆம் சிங்கராயர் - 1844.

9.       இரண்டாம் வத்திகான் சங்கத்தில் மரியன்னைக்கு அளிக்கப்பட்ட சில சிறப்பு பட்டங்கள் யாவைபரிந்துரைப்பவர், துணையாக நிற்பவர், உதவி அளிப்பவர்.

10.     மரியன்னையை வணங்குவது பற்றி இரண்டாம் வத்திகான் திருச்சங்கம் கூறுவது என்னநம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு நம்பிக்கை கொண்டோர்கள் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும்’. (திரு அவை: 82).


Sunday, 24 May 2020

அன்னையை அறிவோம் - 24

அன்னையை அறிவோம் - 24




1. மெஜீகொரி என்கிற கிராமத்தில் மரியன்னை யாருக்கு காட்சி அளித்தார்4 சிறுமிகள் (இவான்கா, மிரியானா, விஷ்கா, மரியாமற்றும் 2 சிறுவர்கள் (இவான், யாக்கவ்). 

2. மெஜீகொரி அன்னையின் காட்சி பெற்ற குழந்தைகளின் வயது விபரம் என்னஇவான்கா (15), மிரியானா (16), விஷ்கா (17), மரியா (16), இவான் (16), யாக்கவ் (10). 

3. மெஜீகொரியில் அன்னையின் முதல் காட்சி எப்போது நடைபெற்றதுஜீன் 24, 1981. 

4. மெஜீகொரியில் மரியாவின் காட்சி பெற்ற இவான்காவிற்கு கடவுள் கொடுத்த சிறப்பு சலுகை என்னஇறந்துபோன தம் தாயிடம் 5 முறை பேசும் அருளை இவான்காவிற்கு கடவுள் கொடுத்தார். 

5. இவான்காவிற்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாதுகுடும்பங்களுக்காக செபிப்பது.

6. மிரியானாவுக்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாதுகடவுளை நம்பாத நாத்திகர்களின் மனமாற்றத்திற்காக செபிப்பது.

7. விஷ்காவிற்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாதுநோயாளிகளுக்காக செபிப்பது.

8. இவானுக்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாதுகுருக்களுக்காகவும் இளையோருக்காகவும் செபிப்பது.

9. மரியாவுக்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாதுஉத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக செபிப்பது.

10. யாக்கவ் என்பவருக்கு புனித மெஜீகொரி அன்னை கொடுத்த செபப் பணி யாதுநோயாளிகளுக்காக செபிப்பது.